இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று இந்தியாவில்தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றைய நிலவரப்படி 653 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 24 மணிநேரத்தில் புதிராக 128 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் 241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் அதிகபட்சமாக 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 17 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 9195 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 77,002 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.