states

img

இந்தியா: ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2135 ஆக உயர்வு

நாட்டில் புதிய வகை கொரோனா ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,135ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்  பரவியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  2135 ஆக உயர்ந்துள்ளது. ஒமைக்ரான் பாதித்த  828 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 653 பேர், தலைநகர் டெல்லியில் 464 பேர், கேரளத்தில் 155 பேர், ராஜஸ்தானில் 174 பேர், குஜராத்தில் 154 பேர், தமிழ்நாட்டில் 121 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.