states

img

புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது

நாட்டில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது மருத்துவ வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் 1,94,720 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 442 பேர் உயிரிழந்தனர்.
நேற்று 1.68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 15.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனா தொற்றிலிருந்து 60,405 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  9,55,319 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிக்கப்படும் விகிதம் 11.05 சதவிகிதமாக உள்ளது. 
இந்நிலையில் நாடுமுழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,868-ஆக அதிகரித்துள்ளது.