இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.
நாட்டில் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,630-ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 797 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தில்லியில் 465 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தானில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 73 வயது முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளர்.