states

img

இந்தியா: புதிதாக 2.35 லட்சம் பேருக்கு கொரோனா தெற்று - 871 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,35,532 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,35,532 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,35,939 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் 871 பேர் உயிரிழந்துள்ளனர். 
இதுவரை மொத்தம் 3,83,60,710 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,93,198 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 20,04,333 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை மொத்தம் 1,65,04,87,260 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 56,72,766 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.