states

img

இந்தியாவில் மீண்டும் ஒரு லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இன்று மீண்டும் ஒரு லட்சத்தை கடந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,17,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 302 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,83,178-ஆக அதிகரித்துள்ளது.
ஒரு நாளில் 30,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,71,363-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் கொரோனா உறுதியாகும் விகிதம் 7.74 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 149.66 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன