states

img

அனைவருக்கும் தடுப்பூசி போடுவதாக மத்திய அரசு  பேசவில்லையாம்

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதாக இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தலைநகர் தில்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், “கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் நோக்கம், வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதுதான். 

வைரஸ் பரவும் ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போட முடிந்து, பரவல் சங்கிலியை உடைக்க முடிந்தால், ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டியது இல்லை என கூறினார். இதை மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷணும் உறுதிப்படுத்தினார்.

அவர் கூறுகையில், ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றியடைந்தால் மாநிலத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என பாஜக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

;