states

img

இரவில் தரையிறங்கும் வசதி இல்லாத 25 இந்திய விமான நிலையங்கள் - சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்

இந்தியாவில் பெரும்பாலான விமானநிலையம் இரவில் தரையிறங்ககும் வசதியை பெற்று இருந்தாலும் ஒருசில விமான நிலையங்களில் இரவில் தரையிறங்கும் வசதி இல்லை என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இந்தியாவில் செயல்படும் 25 விமான நிலையங்களில் இரவு தரையிறங்கும் வசதிகள் இல்லை. குஷிநகர் விமான நிலையம், சிம்லா விமான நிலையம் மற்றும் ஜார்க்கண்டில் சமீபத்தில் திறக்கப்பட்ட தியோகர் விமான நிலையம் உள்பட 25 விமான நிலையங்களில் இரவில் தரையிறங்கும் வசதிகள் இல்லை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
விமான நிலையங்களின் தரம் உயர்த்துதல் அல்லது நவீனமயமாக்கல், இரவு தரையிறங்கும் வசதி உள்ளிட்டவை ஒரு தொடர்ச்சியான செயல் என்றும், நிலம், வணிகம் ஆகியவற்றைப் பொறுத்து அவ்வப்போது இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) மற்றும் பிற விமான நிலைய ஆபரேட்டர்களால் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது இரவு தரையிறங்கும் வசதி, விமானங்களின் செயல்பாட்டுத் தேவை மற்றும் நிலத்தின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முற்றிலும் தேவை மற்றும் திட்டமிடப்பட்ட விமான செயல்பாடுகளுடன் 25 செயல்பாட்டு விமான நிலையங்களில் இல்லை என்று அமைச்சகம் கூறியது.
இரவு தரையிறங்கும் வசதி இல்லாதமல் குஷிநகர் விமான நிலையம், சிம்லா விமான நிலையம் தியோகர் விமான நிலையம், குலு-மனாலி விமான நிலையம், தர்மசாலா விமான நிலையம், பிலாஸ்பூர் விமான நிலையம், ஜக்தல்பூர், கலபுர்கி, கோலாப்பூர் விமான நிலையம், சிந்துதுர்க் விமான நிலையம், லூதியானா, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சமீபத்தில் கோலாப்பூர் விமான நிலையத்தில் இரவு தரையிறங்கும் வசதியை நிறுவியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) குழு கோலாப்பூர் விமான நிலையத்தை ஆய்வு செய்தது. 
ஆய்வின் போது டிஜிசிஏ மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த விமான நிலையம் இரவில் தரையிறங்கும் வசதியை பெற்றுள்ளது.  நாட்டில் 100 க்கும் மேற்பட்ட செயல்பாட்டு விமான நிலையங்கள் உள்ளன என்று கூறியுள்ள சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இரவில் தரையிறங்கும் வசதிகள் இல்லாத விமான நிலையங்கள் பெரும்பாலும் குறைந்த விமான பயணிகள் போக்குவரத்தை பதிவு செய்கின்றன என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
அதனால் பெரும் பாதிப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.  இருப்பினும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்கள் இரவில் தரையிறங்கும் வசதியை பெற்று இருக்கும் நிலையில் இந்த வசதி இல்லாத விமான நிலையங்களுக்கு இரவு நேரத்தில் தரையிறங்கும் வசதிகளை வழங்குவதற்கு பரிசீலனை செய்து வருவதாகவும், இந்த நடவடிக்கையில் அரசு ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.