states

img

100 நாள் வேலைத்திட்டத்தை துவக்குக: விவசாயிகள் போராட்டம்

புதுச்சேரி, மார்ச்.19- புதுச்சேரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை  உடனே துவக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  விவசாயத் தொழிலாளர்களுக்கு பணி அட்டை வழங்க வேண்டும். திட்டத்தில் நாளொன்றுக்கு ரூ. 600 ஆக கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி  திருபுவனை அடுத்துள்ள விநாயகம் பட்டு பேருந்து நிறுத்தம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரதேச குழு உறுப்பினர் சிவசங்கரி தலைமை தாங்கினார். சங்கத்தின் புதுவை பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், விவ சாயிகள் சங்க  பிரதேச செயலாளர் சங்கர், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் மணிபாலன், கொம்யூன் கமிட்டி செயலாளர் விநாயகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சங்க நிர்வாகிகள் செம்மீன், சாமிக்கண்ணு, கணபதி ராமச்சந்திரன், சுந்தர், பாலச்சந்திரன்,மாரியப்பன் உள்ளிட்ட திரளான விவசாய இதில் பங்கேற்றனர்.

;