பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், சட்டப் பேரவைத் தலைவர் செல்வம் ஆகியோரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.