states

img

முப்படை நலத்துறை சார்பில் கொடி நாள் புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி துவக்கி வைத்தார்

முப்படை நலத்துறை சார்பில் நடைபெற்ற கொடி நாள் நிகழ்ச்சியை புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி நிதி வழங்கி துவக்கி வைத்தார். மேலும் 2021-22ஆம் நிதியாண்டில் அதிக கொடி நாள் நிதி திரட்டிய அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு கேடயங்களை வழங்கி கவுரவித்தார். இதில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அரசுச் செயலர் (முப்படை நலம்) பத்மா ஜெய்ஸ்வால், வளர்ச்சி ஆணையர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன், காவல்துறை கூடுதல் தலைவர் ஆனந்த மோகன், முப்படை நலத்துறை இயக்குநர் சந்திரமோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.