புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா திங்களன்று (ஏப். 25) நடைபெற்றது. விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை செயலர் அசோக் குமார், சிகாகோ இலியனாஸ் பல்கலைக்கழகத்தின் நிலையான தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணா ரெட்டி, புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மோகன், பல்கலைக்கழகப் பதிவாளர் சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.