பீகார் மாநிலம் ரூபாலி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
பீகார் மாநிலம் ரூபாலி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த பீமாபாரதி, ஆளும் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு மாறியதால், அத்தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகளில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் 68,070 வாக்குகள் பெற்று 8246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட கலாதர் பிரசாத் மண்டல் 59,824 வாக்குகளும், 3 முறை எம்.எல்.ஏ-வாக இருந்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட பீமா பாரதி 30,619 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளனர்.