பீகார் மாநிலத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மதுபானி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்வதந்தரதா சேனானி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தின்போது ரயில் பெட்டியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர்விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில்ஈடுபட்டனர்.
இந்நிலையில் ரயிலின் 5 பெட்டிகளில் தீ கொளுந்துவிட்டு எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கிழக்கு ஒன்றிய ரயில்வேயின் சிபிஆர்ஓ கூறியதாவது:-
காலி ரயிலில் ஏற்பட்ட தீ காலை 9.50 மணியளவில் அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் தெரிவத்துள்ளார்.