பீகாரில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீகாரின் பூர்னியா மாவட்டம் தாராபாடி பகுதியில் திருமண விழாவில் கலந்து கொண்டு கிஷன்கஞ்ச் மாவட்டத்திற்கு 10 பேர் காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த கார் பூர்னியா-கிஷன்கஞ்ச் மாநில நெடுஞ்சாலை அருகில் உள்ள தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும், உள்ளாட்சி நிர்வாகம் விரைவில் அவர்களின் அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் வட்ட அதிகாரி ராஜ்சேகர் தெரிவித்தார்.