ஹைதராபாத், டிச.27- சமூக வலைதளத்தில் ‘தீன்மார் மல்லண்ணா’ என்று பரவலாக அறி யப்படும் சிந்தபண்டு நவீன்குமார் என்ப வர் அண்மையில் பாஜக-வில் இணைந்தார். அதைத்தொடர்ந்து அவர் சமூக வலைதளத்தில் பாஜக-வுக்கு சாதகமாக, எதிர்க்கட்சிகளை அவதூறு செய்த வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அந்த வகையில், அண்மையில் தெலுங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவின் பேரனும், தெலுங்கானா நகராட்சி நிர்வாகம், நகா்ப்புற மேம் பாட்டுத் துறை அமைச்சரான கே.டி.ராமராவின் மகனுமான ஹிமன்சு ராவ் குறித்து, சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அமைச்சா் கே.டி.ராம ராவ் பகிரங்கமாகவே தனது கண்ட னத்தைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தொண்டர்கள், தீன்மார் மல்லண்ணாவின் யூடியூப் சேனல் அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். இதுகுறித்து சிந்தபண்டு நவீன் குமார் தற்போது போலீசில் புகார் அளித்திருப்பதாகவும், அதன்பேரில் விசாரணை நடத்தி வருவதாகவும் மஜ் கிரி உதவி காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.