states

img

அல்லு அர்ஜுனுக்கு வலுக்கும் எதிர்ப்பு; வீட்டின் மீது கல்வீச்சு ஹைதராபாத்தில் பதற்றம்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்  ஜூன் - ரஷ்மிகா நடிப்பில் உரு வான “புஷ்பா 2” திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. புஷ்பா முதல் பாகம் மெகா ஹிட் அடித்ததால், இரண்டாம் பாகத்தை காண டிசம்பர் 5ஆம் தேதி  அதிகாலை முதலே ரசிகர்கள் திரைய ரங்குகளில் குவிந்தனர்

தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு  டிசம்பர் 5ஆம் தேதி அதிகாலை அல்லு  அர்ஜுன் திரையரங்கிற்கு வந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி  ரேவதி என்ற பெண் மரணம் அடைந்த நிலையில், அவருடைய 7 வயது மகன்  படுகாயம் அடைந்து மூளை செயலிழந்து  மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

முனனறிவிப்பின்றி திடீரென வந்து கூட்ட நெரிசலுக்குக் காரணமாக இருந்  தக நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் திரை யரங்க உரிமையாளர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் இரவு சிறையில் இருந்துவிட்டு பிறகு மறுநாளே அல்லு அர்ஜுன் ஜாமீன் பெற்று வீடு திரும்பினார்.

முதல்வர் கண்டனம்

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கானா சட்ட மன்றத்தில் அம்மாநில முதல்வர் ரேவந்த்,”அல்லு அர்ஜுன் செய்தது மனிதமற்ற செயல். அல்லு அர்ஜுன் வந்தால் கூடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என காவல்துறையினர்  அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் எச்ச ரிக்கையை மீறி கூட்ட நெரிசலை ஏற்  படுத்தி பெண்ணின் உயிரை காவு வாங்கி யுள்ளார். அல்லு அர்ஜூனுக்கு விபத்தில் கை, கால் போன மாதிரி வீட்டுக்குச் சென்று நலம் விசாரிப்பவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பற்றி நலம்  விசாரிக்கவில்லை” என குற்றம் சாட்டினார். 

முதல்வருக்கு பதிலளிக்கும் வகை யில் செய்தியாளர்களுடன் பேசிய அல்லு  அர்ஜுன்,“என்னுடைய புகழ், நற்பெயர் ஆகிய இவற்றை சீர்குலைக்கும் செயல்  கள் நடைபெறுகின்றன” என்று கூறினார்.

போராட்டம்

இத்தகைய சூழலில் நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் குவிந்த உஸ்மா னியா பல்கலைக்கழக கூட்டு போராட்ட குழுவினர், திடீரென்று அங்கிருந்த பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்தும், அல்லு அர்ஜுன் வீட்டின்  மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தி னர். போராட்டத்தின் பொழுது,”ரேவதி குடும்பத்திடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு  கேட்க வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பினர். 

இதனால் அங்கு திடீரென்று பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல்  அறிந்து அங்கு விரைந்த போலீசார்,  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங் கங்களை சேர்ந்த போராட்டக்காரர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு  அழைத்துச் சென்றனர். இதனால் ஹைத ராபாத் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.