ஹைதராபாத், மார்ச் 29 - பாஜகவின் வகுப்புவாத திட்டத்தை அம்பலப்படுத்தும் சிபிஐ(எம்) தலைமையிலான மக்கள் பிரச்சாரப் பயணத்திற்கு தெலுங்கானா முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ‘மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சமூக நீதியைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கத்தை எழுப்பி, சிபிஐ(எம்) தெலுங்கானா மாநிலக் குழுவின் தலைமையில் மூன்று குழுக்கள் வாகனப் பிரச்சாரப் பயணத்தை நடத்துகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் விஜு கிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: ஆர்எஸ்எஸ்-ன் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தும் வகுப்புவாத மற்றும் கார்ப்பரேட் பாஜக ஆட்சியை இந்த பிரச்சாரப் பயணங்கள் அம்பலப்படுத்தும். பல்வேறு இடங் களில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுக்கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்கின்றனர். மிரியால்குடா வில் நாள் முழுவதும் கலந்து கொண்டு கூட்டங்களில் உரையாற்றினர். ஏப்ரல் 5 அன்று நடைபெறும் மஸ்தூர் கிசான் சங்கர்ஷ் பேர ணியை மாபெரும் வெற்றியடையச் செய்ய இப்பிரச்சாரப் பயணம் அழைப்பு விடுத்துள்ளது என விஜு கிருஷ்ணன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த குழுக்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மார்ச் 29 அன்று ஹைதராபாத் தில் நிறைவடைகிறது. பொதுக்கூட்டத்தை அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தொடங்கி வைக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தாமினேனி வீர பத்ரா, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். வீரய்யா, பொதினேனி சுதர்சன் ஆகியோர் பல்வேறு பேரணிகளுக்கு தலைமை தாங்கு கின்றனர்.