மலையாள திரையுலகம் போல, தெலுங்கு திரையுலகிலும் பாலி யல் புகார்கள் தொடர்பான துணைக்குழுவின் அறிக்கையை தெலுங்கானா அரசும் வெளியிட வேண்டும் என நடிகை சமந்தா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,”தெலுங்குத் திரையுலகில் பணியாற்றும் பெண்கள் அனைவரும் கேரளாவின் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையை வர வேற்கிறோம். மேலும் ஹேமா கமிட்டிக் காக தொடர்ந்து குரல் கொடுத்த கேர ளாவின் “விமன் இன் சினிமா கலெக்டிவ் (Women in Cinema Collective)” அமை ப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இதே போல பாலியல் துன்புறுத்தல் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட தெலுங்கு திரையுலகின் “தி வாய்ஸ் ஆப் விமன் (The Voice of Women)” குழுவின் அறிக்கையை வெளியிடுமாறு தெலுங்கானா அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதனால் தெலுங்கு திரையுலகில் உள்ள பெண்க ளுக்கு பாதுகாப்பான சூழலை உரு வாக்கவும், அதற்கான கொள்கைகளை வகுக்கவும் உதவியாக இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.
கேரளாவில் “விமன் இன் சினிமா கலெக்டிவ்” இருப்பது போல், தெலுங்கு சினிமாவில் உள்ள பெண்களுக்கான ஆதரவு குழுவாக “தி வாய்ஸ் ஆப் விமன் (TFI)” கடந்த 2019இல் உருவாக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.