states

img

“பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம்”

“பாஜகவின் ஒரு பிரிவாக  தேர்தல் ஆணையம்”

மக்களவை எதிர்க்கட்சி தலைவ ரும், காங்கிரஸ் மூத்த தலை வருமான ராகுல் காந்தி ஒடிசாவின் தலை நகரான புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர், “ஒடிசா பாஜக அரசாங்கம் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்கிறது. ஏழை மக்களிடமிருந்து ஒடிசாவின் செல்வத்தைத் திருடுவது மட்டுமே. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள நீர், காடு, நிலம் ஆகியவை அவர் களுக்குச் சொந்தமானவை. ஆனால், பழங்குடியினர் அவர்களின் நிலத்தி லிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். மகாராஷ்டிரத்தில் தேர்தலில் முறைகேடு செய்யப்பட்டதைப் போல, பீகாரிலும் தேர்தல் முறைகேடு மேற்கொள்ள முயற்சி நடக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் ஒரு புதிய சதித் திட்டத்தை தீட்டியுள்ளது. தேர்தல் ஆணையம் தன்னு டைய வேலையைச் செய்யவில்லை. அது பாஜகவின் ஒரு பிரிவாகச் செயல்படுகிறது. மகாராஷ்டிரத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் களுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 1 கோடிப் பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லாம் யார், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றி யாருக்கும் தெரியாது. வாக்காளர் பட்டியல் மற்றும் அது தொடர்பான வீடியோவை எங்களுக்கு வழங்குமாறு நாங்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு வருகிறோம். ஆனால் தேர்தல் ஆணையம் எங்க ளுக்கு அதை வழங்க மறுக்கிறது. மகாரா ஷ்டிரத்தில் செய்யப்பட்ட அதே வேலை யை அவர்கள் பீகாரிலும் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் அப்படிச் செய்ய நாங்கள் ஒருபோதும்விட மாட்டோம்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.