அகமதாபாத், ஜூலை 11- அரசியலைப் பொறுத்தவரை ஒருவர் எந்த சாதி, மதத்திலிருந்து வருகிறார்கள் என்ப தல்ல; எந்த சித்தாந்தத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதே முக்கியம் என்று எதிர்க்கட்சிகள் சார்பிலான குடியரசுத் தலை வர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள் ளார். “ஒரு ரப்பர் ஸ்டாம்ப் (குடியரசு) தலைவர் அரசியலமைப்பை காப்பாற்ற ஒருபோதும் முயற்சிக்க மாட்டார்” என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி முடி வடைவதையொட்டி, ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ் வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். பாஜக கூட் டணி வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டி யிடுகிறார்.
இதனிடையே, யஷ்வந்த் சின்ஹா குஜ ராத் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை சந்தித்து ஆத ரவு கோரினார். அப்போது பேசிய யஷ்வந்த் சின்ஹா, “இப்போராட்டம் (குடியரசு தலைவர் தேர்தல்) மிகப்பெரிய போராக மாறியுள்ளது. இதில், குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுபவர் (அது யாராக இருந்தாலும் சரி) அரசி யலமைப்பை காப்பாற்ற தனது உரிமைகளை பயன்படுத்துவாரா என்ற கேள்வி முக்கியமாக எழுந்துள்ளது. ஆனால், ஒரு ‘ரப்பர் ஸ்டாம்ப்’ தலைவர் அதை (அரசியலமைப்பை காப் பாற்றுவதை) ஒருபோதும் செய்ய முயற்சிக்க மாட்டார் என்பது வெளிப்படையானது. இன்று அரசியலமைப்பு விழுமியங்களும், பத்திரிகைகள் உள்பட ஜனநாயக அமைப்பு களும் ஆபத்தில் உள்ளன. நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது. எல்.கே. அத்வானியும், அடல் பிஹாரி வாஜ் பாயும் ஒரு காலத்தில் (1975-77) எமர்ஜென் சிக்கு எதிராக போராடி சிறைக்கு சென்றனர். இன்று அவர்களது சொந்த கட்சியே (பாஜக) நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந் துள்ளது. இது கேலிக்கூத்தானது. இரண்டு கொலைகள் (நூபுர் சர்மா விவ காரத்தில்) நடந்தன. நான் உள்பட அனைவரும் கண்டித்தோம். ஆனால் பிரதமரோ (மோடி), உள்துறை அமைச்சரோ (அமித் ஷா) ஒரு வார்த்தைகூட பேசவில்லை. வாக்குகளை பெறுவதற்காக இது போன்ற பிரச்சனைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புவதால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். பழங்குடி பிரிவைச் சேர்ந்த ஒருவர் (முர்மு) நாட்டின் உயர் பதவியைப் பெறுவதால் இந்தி யாவில் உள்ள பழங்குடி சமூகங்களின் வாழ்க் கையை மாற்ற முடியாது. யார் எந்த ஜாதி, மதத்தில் இருந்து வந்தவர் என்பது முக்கிய மில்லை. யார் எந்த சித்தாந்தத்தை பிரதிநிதித்து வம் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அவர் (முர்மு) ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக 6 ஆண்டுகள் இருந்தபோதிலும், அங்குள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கை மாறவில்லை. எனவே, தற்போது நடப்பது, இரு வேறு சித் தாந்தங்களுக்கு இடையே நடக்கும் சண்டை. இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா பேசியுள் ளார்.