states

img

‘அது ஒரு கொடுங்கனவு...’

புதுதில்லி, ஜூன் 10-  இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலை வரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது முன்னணி இந்திய மல்யுத்த வீராங்க னைகள் கூறியிருக்கும் பாலியல் துன்புறுத்தல் புகார்களை சர்வதேச மல்யுத்த நடுவர் ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். மல்யுத்த நடுவரான ஜக்பீர் சிங்,“பிரிஜ் பூஷண் சிங், கடந்த காலங்களில் பல்வேறு தருணங்க ளில் வீராங்கனைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார்”என்று தெரிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு முதல் சர்வதேச மல்யுத்த விளையாட்டுகளில் நடுவராக இருந்துள்ள ஜக்பீர் சிங், தில்லி காவல் துறையினரிடமும் மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியுள்ளார்.

புகைப்பட நிகழ்வு 

தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜக்பீர் சிங் பேட்டி அளித்தபோது பிரிஜ் பூஷணின் தகாத செயல்களை நினைவுகூர்ந்தார். அவர் கூறுகை யில், “கடந்த 2022, மார்ச் 22-ல் லக்னோவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் ட்ரையல்ஸின்  போது பிரிஜ் பூஷண் ஒரு மல்யுத்த வீராங்கனை யிடம் தகாதமுறையில் நடந்து கொண்டார். புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் போது வீராங்கனை ஒருவர் கூட்டமைப்பின் தலைவர் அருகில் நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்த வீராங்கனை அசவுகரியமான முகபாவ னையை வெளிப்படுத்தினார். அனைவரின் கவன மும் அந்த வீராங்கனையின் மீது திரும்பியது. அந்த வீராங்கனை தான் நின்ற இடத்தில் இருந்து விலகி, ஒரு கையைத் தள்ளிவிட்டு, முணுமுணுத்தபடியே அங்கிருந்து விலகிச் சென்றார். என்ன நடந்தது என்று நாங்கள் பார்க்கும் போது, பிரிஜ் பூஷண் அந்த வீராங்க னையின் மீது தகாத முறையில் கைகளை வைத்தி ருந்தார். முதலில் அவ்வீராங்கனை பிரிஜ் பூஷண் அருகில் நின்றிருந்தார். அதன்பிறகு முன்னால் சென்று நின்று கொண்டார். அப்பெண் நடிப்பதாக நான் உணரவில்லை. அவளுக்கு விரும்பத்தகாத செயல் ஏதோ ஒன்று நடந்துள் ளது” என்று தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து சம்பவம்

மேலும், பிரிஜ் பூஷண் சிறுமிகளாக இருந்த மல்யுத்த வீராங்கனைகளிடமும் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ள ஜக்பீர் சிங், கடந்த 2013ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி நிகழ்வினை நினைவு கூர்ந்துள்ளார். அவர் கூறுகையில், அந்தப் போட்டியின் போது, மாமிசம் சாப்பிட்டு பழக்கப்படாத ஜூனியர் வீராங்கனைகளுக்கு இந்திய உணவுகளை அவர்களின் ஹோட்டல் அறைக்கே கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தார். தாய்லாந்தில் உள்ள அந்த ஹோட்டலில் பிரிஜ் பூஷணின் நண்பர்கள் சிலரும் இருந்தனர். அவர்கள் அந்த சிறுமிகளை தகாதமுறையில் தொட்டுக்கொண்டிருந்தனர். இவை நிகழும் போது நான் அங்கிருந்தேன். அது ஒரு கொடுங்கனவு போல இருந்தது” என்று தெரி வித்தார்.