states

img

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு

புதுதில்லி, ஜூன் 2- மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட் டத்திற்கு 1983இல் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் குழு ஆதரவு அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27 அன்று முதல் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு குவிந்து வரும் நிலையில், 1983இல் நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பையில் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் குழு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக அப்போதைய கேப்டன் கபில் தேவ் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட்டாக வெளியிட அறிக்கையில், ‘‘எங்களின் சாம்பியன்களான மல்யுத்த வீரர்கள் மனிதாபி மானமற்ற முறையில் கையாளப்படும் காட்சிக ளைக் கண்டு நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். அவர்கள் கஷ்டப்பட்டு வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச நினைக்கி றார்கள் என்பது எங்களுக்கு மிகவும் கவலை யாக உள்ளது. 

அந்தப் பதக்கங்கள் அவர்களின் பல வருட முயற்சி, தியாகம், உறுதிப்பாடு மற்றும் மன உறுதியை உள்ளடக்கியவை. அவை அவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, அது தேசத்தின் பெருமையையும் மகிழ்ச்சியையும் உள்ளடக்கியுள்ளது.  இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று நாங்கள் வீரர், வீராங்கனைகளை கேட்டுக்கொள்கி றோம். மேலும் அவர்களின் குறைகள் கேட்கப் பட்டு விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம். நாட்டின் சட்டம் வெல்லட்டும்’’ என அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. 1983இல் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பலம் வாய்ந்த மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பையை வென்றது. கேப்டன் கபில் தேவ் தலைமையில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் சுனில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த், சையத் கிர்மானி, யஷ்பால் ஷர்மா, மதன் லால், பல்விந்தர் சிங் சந்து, சந்தீப் பாட்டீல், கிர்த்தி ஆசாத் மற்றும் ரோஜர் பின்னி ஆகியோர் இருந்தனர். இவர் கள்தான் தற்பொழுது மல்யுத்த வீராங்கனை களின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். ஏற்கெனவே இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்பிளே மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் பாஜக எம்.பி., பிரதமரின் பாதுகாப்பில் உள்ளார் : ராகுல் காந்தி

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘‘இந்திய மகள்கள் நீதி கேட்டு கதறி அழுகின்றனர். இந்தி யாவுக்கு 25 சர்வதேச பதக்கங்களைக் கொண்டு வந்த 5 மகள்கள் நீதி கேட்டு தெருவில் கதறி அழுகின்றனர். 15 கொடூர மான பாலியல் குற்றச்சாட்டுகளுடன் எம்.பி., பிரிஜ் பூஷண் பிரதமரின் பாதுகாப்பில் உள்ளார். இந்திய மகள்களின் இந்த நிலைக்கு பாஜக அரசே காரணம்’’ என பதிவிட்டுள்ளார்.