பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் 8 அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி
புதுதில்லி, மார்ச் 6- எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் குறிவைத்து மோடி அரசு நடத்தும் சூனிய வேட்டை, இந்தியா ஜனநாயக நாடுதானா? அல்லது சர்வாதிகாரத்திற்கு மாறிவிட்டதா? என்ற கேள்விகளை எழுப்புவதாக, எதிர்க் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி, பாரத் ராஷ்டிர சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கி ரஸ், சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக் கரே), ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு, கடிதம் ஒன் றையும் அனுப்பி வைத்துள்ளனர். அந்த கடி தத்தில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது: ‘‘இந்தியா இன்னும் ஒரு ஜனநாயக நாடு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். ஆனால், இந்தியாவில் அரசி யல் ஆதாயத்துக்காக மத்தியப் புலனாய்வு விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன் படுத்தப்படுகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத் திய அமைப்புகளைக் கண்மூடித்தனமாக பயன் படுத்துகின்றன. இது, நாம் ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்திற்கு மாறிவிட் டோமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
தற்போது, நீண்ட சூனிய வேட்டைக்குப் பிறகு, மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக ஒரு சிறிய ஆதாரமும் இல்லாதபோதும்- மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அவரை ஊழல் வழக்கில் பிப்ரவரி 26 அன்று கைது செய்துன் னது. இது அரசியல் சதி. சிசோடியாவின் கைது இந்திய மக்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கி யிருக்கிறது. அவரது கைதைத் தொடர்ந்து, பாஜக ஆட்சியில் ‘இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா?’ என்று உலக நாடு கள் சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கி யுள்ளன. தில்லி அடைந்துள்ள கல்வி வளர்ச்சி யின் மூலம் உலக நாடுகளால் நன்கு அறியப் பட்டவர் மணீஷ் சிசோடியா. அவரது கைது உலக நாடுகளை இந்தியாவின் ஜனநாயக மதிப்பின் மீது சந்தேகிக்கச் செய்துள்ளது. சுவாரஸ்யம் என்னவென்றால், பாஜகவில் இணையும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலை வர்கள் மீதான வழக்குகளில் மட்டும் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் இவ்வளவு வேகம் காட்டுவதில்லை. விசாரணை அமைப்பு களின் நடவடிக்கை மந்தமாகி விடுகிறது. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்பு காங்கிரஸில் இருந்தார். அவர் மீது 2014-ஆம் ஆண்டு சாரதா சிட் பண்ட் நிதி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை செய்து வந்தன. ஆனால், அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த பிறகு அவர் மீதான வழக்கு விசாரணையில் எந்த ஒரு முன் னேற்றமும் இல்லை.
இதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் முன் னாள் தலைவர்களான சுவேந்து அதிகாரி மற்றும் முகுல் ராய் ஆகியோர் நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கில் அமலாக்கத்துறை மற் றும் சிபிஐ கண்காணிப்பின் கீழ் இருந்தனர், ஆனால் அவர்கள் மேற்குவங்க மாநில சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்துவிட்ட பின், வழக்கு விசாரணை களில் முன்னேற்றம் இல்லை. மகாராஷ்டி ரத்தின் நாராயண் ரானே உள்பட இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. 2014 முதல் உங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள புலனாய்வு அமைப்புகளால் மேற்கொள் ளப்பட்ட சோதனைகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை கள் மற்றும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முக்கிய அரசியல்வாதிகளின் மொத்த எண் ணிக்கையில், எதிர்க்கட்சியினர்தான் அதிக பட்சமாக உள்ளனர். இதற்கு லாலு பிரசாத் யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), சஞ்சய் ராவத் (சிவசேனா), ஆசம் கான் (சமாஜ்வாதி), நவாப் மாலிக், அனில் தேஷ்முக் (தேசிய வாத காங்கிரஸ்), அபிஷேக் பானர்ஜி (திரிணா முல் காங்கிரஸ்) என ஏராளமான உதாரணங் களை கூறலாம். அதுமட்டுமல்ல, இவர்கள் கைது செய்யப் படும் நேரம் மிகவும் முக்கியம். தேர்தல் நேரங்க ளில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இது அரசியல் ஆதா யத்துடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாகும். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் (அதானி) முத லீடு செய்ததன் காரணமாக எல்ஐசியும், எஸ்பிஐ யும் தங்கள் பங்குகளின் சந்தை மூலதனத்தில் இருந்து ரூ. 78,000 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ளதாக ஒரு சர்வதேச நிதி ஆராய்ச்சி (ஹிண்டன்பர்க்) நிறுவனம் அறிக்கை வெளி யிட்டுள்ளது. அவ்வாறு “பொதுப் பணம் பண யம் வைக்கப்பட்டுள்ள போதிலும், அந்த (அதானி குழும) நிறுவனங்களின் நிதி முறை கேடுகளை விசாரிக்க மத்திய ஏஜென்சிகளை ஏன் கட்டாயப்படுத்தவில்லை?” என்ற கேள்வி எழுகிறது.
இவை ஒருபுறமிருக்க, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் மாநில நிர்வாகத்தில் அடிக்கடி தலையிட்டு இடையூறு ஏற்படுத்துகின்றனர். நாடு முழு வதிலும் ஆளுநர் அலுவலகம் தொடர்ந்து அர சியலமைப்பில் கூறப்பட்டுள்ள விதிமுறை களை மதிக்காமல் மீறி வருகின்றனர். அவர் கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளை மதித்து நடக்காமல் அரசுக்குத் தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப்பின் ஆளுநர்கள் மற்றும் தெலுங்கானா, தில்லியின் ஆளுநர்கள் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை செயல் பட விடாமல் இடையூறு செய்து வருகின்றனர். ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் தீர்ப்பே இறுதி யான ஒன்றாக உள்ளது. உங்களுடன் முரண் பட்ட கொள்கையை கொண்ட ஒரு கட்சியாக இருந்தாலும், மக்கள் அவர்களுக்கு ஆதர வாக அளித்த தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். ஆனால், பாஜக கூட்டாட்சி தத்துவத்தை மதிக் காமல் நடந்து வருகிறது. இதனால், மக்கள் இந்திய அரசியலில் ஆளுநரின் தேவை குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளையும் ஆளுநர் அலுவலகங்களையும் தேர்தல் மோதலுக்கு வெளியே பகைகளைத் தீர்த்துக் கொள்ளும் அமைப்புகளாக பயன்படுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது. ஜன நாயகத்திற்கும் இது நல்லதல்ல. ஜனநாயக நாட்டில் மக்களின் விருப்பமே உயர்ந்தது என்பதை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.