states

img

காங்கிரஸ் தட்டில் சாப்பிட்டு விட்டு தோல்வி வந்தவுடன் புலம்புவதா?

புதுதில்லி, மார்ச் 17- காங்கிரசுக்குள் இருந்து கொண்டே, அக்கட்சியின் தலை மைக்கு எதிராக குலாம் நபி ஆசாத், கபில் சிபல், மணீஷ் திவாரி உள் ளிட்டோர் பேசி வருகின்றனர்.  அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்த நிலையில், இந்த ‘ஜி23’ தலை வர்கள் புதனன்று மீண்டும் தங்க ளுக்குள் கூடி ஆலோசித்தனர். அதன்  முடிவில் 18 தலைவர்கள் கையெ ழுத்திட்டு அறிக்கை ஒன்றை வெளி யிட்டனர். “அனைத்து நிலைகளிலும் முடிவுகளை எடுக்கக்கூடிய அனை வரையும் உள்ளடக்கிய கூட்டுத் தலைமையை உருவாக்குவது மட்டுமே காங்கிரஸ் கட்சியை பலப் படுத்துவதற்கான ஒரே வழி. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வுக்கு எதிராக நம்பிக்கைக்குரிய மாற்றுக் கட்சியை உருவாக்க வேண் டுமெனில் ஒத்த கருத்துடைய கட்சி களுடன் காங்கிரஸ் கட்சி பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனந்த் சர்மா, கபில் சிபல், பூபிந்தா் சிங் ஹூடா, பிருத்விராஜ் சவான், மணீஷ் திவாரி, சசி தரூா், விவேக் தன்கா, ராஜ் பப்பர், அகி லேஷ் பிரசாத் சிங், சந்தீப் தீக்ஷித்  உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 2017-இல் காங்கிரசிலி ருந்து விலகிய மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர், சங்கர் சிங் வகேலா, முன்னாள் பஞ்சாப் முதல்வர் அம ரீந்தர் சிங்கின் மனைவியும், காங்கி ரஸ் எம்.பி.யுமான பிரணீத் கவுர் ஆகியோரும் பங்கேற்றனர். இந் நிலையில், “ஜி23’ தலைவர்களை, காங்கிரஸ் கூட்டணியிலுள்ள சிவ சேனா கடுமையாக விமர்சித்துள்ளது.  “காந்திகள் (சோனியா, பிரி யங்கா, ராகுல்) தலைமையை துறப்பது இருக்கட்டும். காங்கிரசை முன்னோக்கி அழைத்து சென்று வெற்றி பெறச் செய்யும் தலைவர் ‘ஜி23’-ல் இருக்கிறார்களா? காங்கி ரசின் தட்டு, கிண்ணத்தில் இருந்து சாப்பிட்டு, குடித்து விட்டு ஏப்பம் விடும் தலைவர்கள் தோல்விக்காக தற்போது புலம்புகிறார்கள். இவர் களில் எத்தனை தலைவர்கள் 5 மாநில தேர்தலுக்கு (பிரச்சாரத்துக்கு) சென் றனர். எத்தனை பேர் உண்மையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரசை விட்டு வெளியேறி சொந்த கட்சி (பஞ்சாப் லோக் காங்கிரஸ்) தொடங்க முடிவு செய்தபோது, எத்தனை ‘ஜி23’  தலைவர்கள் அவரை சமாதானப் படுத்த முன்வந்தனர்?” என்று தனது சாம்னா பத்திரிகை தலையங்கத் தில் சிவசேனா கேள்வி எழுப்பி யுள்ளது. “காங்கிரஸ் கட்சிக்கு இன்று காந்தி குடும்பம் தேவை” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.