states

img

மோடி மைதானத்திற்கு மட்டும் தனி கவனிப்பு ஏன்?

4ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் மட்டும் நல்ல கவனிப்பில் மேலை நாடுகளில் இருக்கும் புல்தரைகளால் ஜொலித்தது. பிட்ச் பகுதி ஆஸ்திரேலிய, இங்கிலாந்து நாட்டு மைதானங்கள் போன்று பளபளப்பாக இருந்தது. இந்தியாவில் இப்படி ஒரு மைதானம் என்ற ஒரு விஷயம் ஒருபக்கம் இருந்தாலும், மற்றோரு பக்கம் சர்ச்சையான கேள்விகள் பல உள்ளன.

1. மைதானம் திறக்கப்பட்டு (புதுப்பிக்கப்பட்டு) வெறும் 4 வருடங்கள்தான் ஆகும் பொழுது ஒவ்வொரு தொடரிலும் அகமதாபாத் மைதானத்திற்கு பிக்சிங் கொடுப்பது எப்படி? யார் சிபாரிசில் இந்த விவகாரம் நடக்கிறது?
2.    பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா (சொந்த ஊர்) கட்டுப்பாட்டில் இருப்பதால் ஜொலிக்கிறதா?
3. ஆஸ்திரேலிய தொடரின் 3 டெஸ்ட் போட்டிகளிலும் மைதான விவகாரம்  சர்ச்சை பொருளாக உள்ள நிலையில்,மைதானத்திற்கு மட்டும் ஏதேனும் தனி சிறப்பு உள்ளது போல பிட்ச், கிரீன் பிட்ச் நன்றாக இருப்பது எப்படி?
4. வெப்ப மண்டல பூமியில் குளிர்பிரதேச அளவிற்கு புற்கள் வளர்ச்சி எப்படி?
5. அனைத்து மாநில மைதானங்களிலும் புற்கள் வளர்ச்சிக்கு இதே நிலை பின்பற்றினால் கிரிக்கெட் உலகில் இந்தியா தனிக்காட்டு ராஜாவாக வலம் வரவாய்ப்புள்ளது.
5. மைதானத்தின் பெயரால் அரசியல் நெருக்கடி அல்லது, வேறு ஏதும் ஆதாய காரணங்களால் அகமதாபாத்நரேந்திர மோடி மைதானத்திற்கு மட்டும் தனி கவனிப்புஉள்ளதா? என பல்வேறு கேள்விகள் எழுந்துவருகிறது.

மைதானங்கள் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் சொந்தமானது

உண்மையில் மைதான கவனிப்பு என்பது விளையாடும் இரு நாட்டு வீரர்களுக்கும். பணம் கொடுத்து போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் மைதான பராமரிப்பு, பிட்ச், பெவிலியன் அமைப்புகள் மேற்கொள்ளப் படும். பிரதமர் உள்ளிட்ட சிறப்பு விருத்தினார்கள் வருகை  தந்தால் பெவிலியனில் மாற்றம் செய்யப்படுமே தவிர  மைதான வேலைகளில் தலையீடு இருக்காது. ஆனால்  தற்போதைய காலத்தில் பிசிசிஐ ஜெய் ஷா கட்டுப்பாட்டில்  இருப்பதால் அரசியல் ஆதாயம், வருமான எதிர்பார்ப்பு,  விளம்பர ஆதாயம், கிரிக்கெட் உலகிற்கு சம்பந்தம் இல்லாத  அதானி பெயரில் கூட பெவிலியன் (2 பெவிலியன்கள்) வைத்து ஆதாய கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.