மோகன் பகவத் வெறிப்பேச்சு
டேராடூன், ஏப். 15 - “சனாதனமே இந்து ராஷ்டிரம்; அதற்கான பயணம் துவங்கி விட்டது; இன்னும் 15 ஆண்டுகளில் இந்து ராஷ்டிரம் அமையும்; குறுக்கே யார் வந்தாலும் அவர்களின் கதை முடிக்கப்படும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடைபெற்ற சாமியார்கள் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் மேலும் பேசியிருப்ப தாவது: “இந்தியா அகிம்சையைப் பற்றிப் பேசும், அதேநேரத்தில் தடியையும் தூக்கும். சுவாமி விவேகானந்தர் மற்றும் மகரிஷி அரவிந்தரின் கனவு இந்தியா இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் நன வாகும். 20 முதல் 25 ஆண்டுகள் தேவை யில்லை. வேகத்தை அதிகரித்தால், எனது அனுபவத்தில் இருந்து நான் கூறுகிறேன். 8 அல்லது 10 ஆண்டுகளுக்கு உள்ளா கவே சுவாமி விவேகானந்தரும் மகரிஷி அர விந்தரும் கற்பனை செய்த இந்தியாவைப் பார்ப்போம். அகிம்சையைப் பற்றிப் பேசுவோம். ஆனால், தடியுடன் நடப்போம்.
அந்த தடி கடினமானதாக இருக்க வேண்டும். ‘இந்து ராஷ்டிரம்’ என்பது ‘சனாதன தர்மம்’ தான். ‘மதமே இந்தியாவின் உயிர்’ என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். எனவே, மத முன்னேற்றம் இல்லாமல் இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியமில்லை. அந்த வகையில், இந்தியா தனது முன்னேற்றப் பயணத்தைத் தொடங்கி விட்டது. இப்போது ஒரு வாகனம் செல்லத் தொடங்கி உள்ளது. இந்த வாகனத்தில் வேகத்தைக் கூட்டும் கருவி (ஆக்சிலேட்டர்) மட்டுமே இருக்கிறது. நிறுத்துவதற்கான கருவி (பிரேக்) கிடையாது. அதனால் யாரும் குறுக்கே வந்து விடாதீர்கள். தேவையென்றால், எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் அல்லது ஸ்டேசனில் இரு ந்து கொள்ளலாம். மாறாக, பயணத்தை மட்டும் தடுத்து நிறுத்த நினைக்க வேண் டாம். இந்தியாவின் முன்னேற்றப் பய ணத்தை நிறுத்த விரும்புவோர் அகற்றப் படுவார்கள் அல்லது முடிக்கப்படுவார்கள். இவ்வாறு மோகன் பகவத் பேசி யுள்ளார்.