மல்லிகார்ஜூன கார்கே சாடல்
புதுதில்லி, ஜூலை 23 - ‘ஒன்றிய அரசின் பல்வேறு துறை களில் 30 லட்சம் பணியிடங்கள் காலி யாக உள்ளன; எப்போதோ நிரப்ப வேண்டிய பணிகளுக்கு இப்போது பிரத மர் மோடி நியமன ஆணை வழங்கிக் கொண்டிருக்கிறார்’ என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர், தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: “ஒன்றிய அரசுத் துறைகளில் மட்டும் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. எப்போதோ நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள், இப்போது நிரப்பப்படுகின்றன. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு தவணை முறையில் நியமன ஆணை களை வழங்கி, ‘ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும்’ என்ற பாஜகவின் வாக்குறுதியை நிறை வேற்றி வருவது போல் காட்டிக் கொள்கிறார் பிரதமர் மோடி. கடந்த 9 ஆண்டுகளாக மோடி அரசின் தவறான கொள்கைகளால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங் கள் மீது சுமை அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 20 ஆயி ரம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறு வனங்கள் மூடப்பட்டுள்ளன. லட்சக் கணக்கான இளைஞர்கள் வேலை யிழந்துள்ளனர். அவர்களின் எதிர்காலத்தை இருள் சூழ்ந்துள்ளது. பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரி வினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். இத்தகைய சூழ்நிலையை, நாட்டின் இளைஞர்கள் இனியும் சகித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இந்த இளைஞர் விரோத அரசு, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்படும். பாரதம் ஒருங்கிணையும்; ‘இந்தியா’ வெல்லும்” என்று மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டுள்ளார்.