- மானியக் கோரிக்கையின் போது வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்
சென்னை, ஜன. 6 - தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலை வர்கள் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த னர். அப்போது அவர்கள் கூறியது வருமாறு: சிபிஎம் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தை மதிக்காத, அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யும் ஒரு ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர்தான் ஆர்.என்.ரவி. அரசின் திட்டங்கள் என்பதுதான் ஆளுநர் உரை. இதை படிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், கடந்த முறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதை படிக்க வில்லை. தனது கடமையிலிருந்து தவறினார். அது என்ன என்பது ஊடக நண்பர்கள் அனை வருக்கும் தெரியும். தமிழ்நாட்டு மக்களும் பார்த்தனர். அரசு தயாரித்து அச்சடித்து கொடுத்ததை படிக்காமல் அவருக்கு எது விருப்பமோ அதை படித்தார். தான்தோன்றித்தனமாக, அவரது விருப்பத்திற்கு ஏற்றார் போல் வாசித்து ஆளுநர் உரையை கேலிக்குரியதாக மாற்றிய சம்பவம் நடந்தது. கடந்த முறை அரசின் உரையில் ஒரு வரி கூட படிக்காமல் சென்றுவிட்டார். இந்த முறை யும் அதேபோல் அரசு கொடுத்த உரையை படிக்காமலேயே சென்றுவிட்டார். இது, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செய லாகும். நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகவும் நாங்கள் இதை பார்க்கிறோம். ஆளுநர் தனது கடமையில் இருந்து முழுமையாக தவறி விட்டார் என்பதையும் தெரிவிக்கிறோம்.
இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?
தமிழ்நாடு சட்டமன்றத்தை மதிக்காமல், சட்டமன்ற உறுப்பினர்களை மதிக்காமல், தமிழ்நாடு மக்களை மதிக்காமல் தானடித்த மூப்பாக செயல்படும் இந்த ஆளுநருக்கு அதிகாரத்தை கொடுத்தது யார்? என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு மக்களுக்கும் அரசுக்கும் எதிராக செயல்படும் இந்த ஆளுநர் தமிழ கத்திற்கு மட்டுமல்ல ஆளுநராகவே இருப்ப தற்கும் தகுதியற்றவர் என்பதை சட்டமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து கூறி வருகிறோம். எனவே, உட னடியாக இவரை தமிழ்நாட்டில் இருந்து திரும்பப் பெற வேண்டும். எங்களின் இந்த கோரிக்கைக்கு ஒன்றிய அரசும் பிரதமரும் செவி கொடுக்க வேண்டும். ஆர்.என். ரவி இனி ஒரு நிமிடம் கூட தமிழ்நாட்டின் ஆளுந ராக தொடரக்கூடாது என்பதை வலியுறுத்து கிறோம்.
அண்ணா பல்கலை. விவகாரம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. கல்வி நிலையங்களில் பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பி யிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள் அமைப்பு கள் போராடி வருகிறது. ஆனால், முதன் முத லாக போராடியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருக்கும் மாதர், வாலிபர், மாணவர் அமைப்புகள் தான். மாநிலம் முழுவதும் கல்வி வளாகங் களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப் படுத்த வேண்டும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்கு தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று சிபிஎம், சிபிஐ ஆகிய இரண்டு கட்சிகளின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். வழக்கமாக ஆளுநர் உரை என்பது அரசின் திட்டங்களை, அரசின் கொள்கை முடிவுகளை சொல்லக் கூடியதாகும். அந்த அடிப்படையில், ஆளுநரின் உரையில், இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை பற்றி சொல்லியிருக்கிறது. அதே நேரத்தில், இந்த இன்னமும் செய்ய வேண்டியது ஏராளம் இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த அரசு சொல்லியதை செய்யாமல் இருப்பதை இந்த கூட்டத் தொடரின் மானிய கோரிக்கையில் நிறைவேற்றி கொடுக்கும் என்று உழைப்பாளி மக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்ற கருத்தாலும் கரத்தாலும் உழைக்கக்கூடிய அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறார்கள். அதை முதல்வர் செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது. இவ்வாறு நாகை மாலி கூறினார்.
சிபிஐ சட்டமன்ற குழுத் தலைவர் டி.ராமச்சந்திரன்
சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் மரபுபடி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் பின்னர், ஆளுநர் உரையை தொடங்கி நிறைவு செய்ததும் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் தான் பல ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறையாகும். ஆனால், முதலில் தேசிய கீதம் பாடவில்லை என்று ஆளுநர் சொன்னது மட்டுமல்ல, அவர் ஒப்புதல் கொடுத்த உரையை கூட வாசிக்காமல் மரபுகளையும் மீறி வெளி நடப்பு செய்திருக்கிறார். மேலும் தமிழ்மொழி, பண்பாடுகளுக்கு எதிராகவும் செயல்படு கிறார். மேலும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டிய ஆளுநர், அரசியல் அமைப்பு சட்டத்தையும், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தையும் அவமதிப்பு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டிக்கிறோம். ஆளுநர் உரையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த பல வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். பல வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என்று எதிர்பார்த்தோம். அதில் குறிப்பாக, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்கள் கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகளாகும். எனவே, இந்த கூட்டத்தொடரில் இது குறித்து இரண்டு கட்சிகளும் வலியுறுத்துவோம். இவ்வாறு தெரிவித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்ன துரை உடனிருந்தார்.