states

பணமதிப்பு நீக்கம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள்..!

ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு

புதுதில்லி, டிச. 8 - “பொருளாதாரம் சார்ந்த முடிவு;  அரசின் கொள்கை முடிவு என்பதற்காக, அது செயல்படுத்தப்படும் விதங்களில் சட்டமீறல்களை அனுமதிக்க முடியாது” என உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசை  எச்சரித்துள்ளது.பணமதிப்பு நீக்கத்தின் போது, சட்ட நெறிமுறைகள் பின்பற்றப் பட்டதா? என்பதற்கான ஆவணங்களை டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இந்த நட வடிக்கை பொருளாதார ரீதியாக நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியது. 6 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அதன் பாதிப்பு தொடர்கிறது.  இவை ஒருபுறமிருக்க, ஒன்றிய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க  நடவடிக்கையில் சட்டமீறல்கள் உள்ள தாகவும், நிர்வாக உத்தரவு மூலம் கரன்சி நோட்டுகளை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்றும் 2016-ஆம்  ஆண்டே உச்சநீதிமன்றத்தில் வழக்குகள்  தொடரப்பட்டன. மொத்தம் 58 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த  வழக்குகளை விசாரித்த அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.  தாக்கூர், “மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் குறித்து கவலை தெரி விக்கிறோம் என்றாலும் ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று கூறி விட்டார். அதேநேரம் சட்டமீறல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால், இந்த வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றினார்.

எனினும், பணமதிப்பு நீக்கத்திற்கு எதிரான வழக்குகள், இந்தாண்டில்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன், பி.வி. நாகரத்னா ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த சில வாரங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். முந்தைய விசாரணைகளின்போது, “பணமதிப்பு நீக்கத்திற்கு எதிரான வழக்கு களை அரசியல் சாசன அமர்வு விசா ரிக்கத் தேவையில்லை. தனிநபர்களின் பாதிப்புக்கு நிர்வாக ரீதியாக தீர்வு காண லாம். உச்சநீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை” என ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். ஆனால், “அர சியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து பேசும்போது, அதனை ‘நேர விரயம்’ என ஒன்றிய அரசு குறிப்பிடுவது வியப்பளிக்கிறது” என்று மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. “அர சியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் என வழக்கில் குறிப்பிடப் படும்போது, அதற்கு பதிலளிக்க வேண்டி யது நீதிமன்றத்தின் கடமையாகும்” என்று நீதிபதி நாகரத்னா விளக்கினார்.  அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ப. சிதம் பரம், “ரூபாய் நோட்டுகளை முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை.

ஒரு குறிப்பிட்ட தொடரின் ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்ய மட்டுமே சட்டப் பிரிவு 26(2) ஒன்றிய அர சுக்கு அதி காரம் அளிக்கிறது” என்று தெரி வித்தார். மேலும், “பணமதிப்பு நீக்கம் தொடர்பான முழு நடைமுறையும் சுமார் 26 மணி நேரத்தில் செய்யப்பட்டதாக எனது கணக்கீடு காட்டுகிறது. கடிதம் நவம்பர் 7-ம் தேதி பிற்பகலுக்குப் பிறகு ரிசர்வ் வங்கிக்கு வருகிறது. அதன் பிறகு நவம்பர் 8-ம் தேதி தில்லிக்கு சந்திக்க வரு மாறு மத்திய வாரியத்திற்கு தொலைபேசி யில் அழைப்பு தரப்பட்டுள்ளது. மாலை 5:30 மணிக்கு சந்திப்பு நடக்கிறது. ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத்திற்குள், அங்குவந்த பரிந்துரைகள் கையோடு அமைச்சரவைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பின்னர், பிரதமர் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி பணமதிப்பு நீக்கத்தை அறி விக்கிறார். இது மிகவும் மூர்க்கத்தனமான முடிவெடுக்கும் செயல்முறையாகும். மேலும், இது சட்டத்தின் ஆட்சியை கேலி  செய்கிறது. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம்-  1934-இன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இயக்குநர்களின் எண்ணி க்கை மற்றும் உருவாக்கப்பட்ட விதிகள்  மற்றும் விதிமுறைகளின் கீழ் இயக்குநர் களுக்கு முன் அறிவிப்புகொடுப்பது தொடர்பான விதிகள் கடைபிடிக்கப் பட்டதா? என்பதற்கான ஆவணங்கள் 6  ஆண்டுகளைக் கடந்தும் தாக்கல் செய்யப் படவில்லை” என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் ஜெய்தீப் குப்தா, “நாட்டின் நலன் கருதி யும், பாதுகாப்பை கருதியுமே இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்தது. இதில் சட்டரீதியான அனை த்து நடைமுறைகளும் கடைப்பிடிக்கப் பட்டன. இதனை செயல்படுத்துவதில் சில இடையூறுகள் இருந்தது உண்மைதான். ஆனால் அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. மக்களை பெரிதும் பாதிக்காத வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அனைத்துக்கும் மேலாக, இது ஒன்றிய அரசின் பொருளா தாரக் கொள்கை. எனவே, இதில் நீதி மன்றம் தலையிட முடியாது” என்று வாதங்களை எடுத்து வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு ஒன்றிய அரசு கொள்கை முடிவுகளை எடுக்கலாம். இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. அதே சமயத்தில், இந்த முடிவுகளை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகளில் நீதிமன்றங்களால் தலையிட முடியும். பொருளாதாரக் கொள்கைகள் எனக் கூறி எங்களை கட்டிப்போட முடியாது. அரசின் முடிவுகள் செயல்படுத்தப்படும் விதத்தை நாங்கள் கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என காட்டமாக குறிப்பிட்டனர். 

இதனிடையே, பணமதிப்பு நீக்கம் முடிந்துபோன விவகாரம். இதனை விவாதிப்பதால் நிவாரணம் ஏதும் கிடைக்கப் போவதில்லை. அப்படியிருக்க, இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடி யும்? என்று அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி வாதத்தைவைத்தார். அப்போது, ‘பொருளாதார நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த விவகாரத்துக் குள் செல்ல வேண்டாம் என்கிறீர்கள். அப்படியானால் ரிசர்வ் வங்கியின் அனு மதியில்லாமல் பணமதிப்பு நீக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரிசர்வ்  வங்கி சட்டப்பிரிவு 26 (2) மீறப்பட்டுள்ள தாக எதிர்தரப்பினர் முன்வைக்கும் புகாருக்கு உங்களின் பதில் என்ன? பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக வாதிடும் நீங்கள், இதை மேற்கொள்வதற்கான நெறி முறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை நீதி மன்றத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும்’ என்றனர். மேலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான ஆவணங்களை டிசம்பர் 10-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.