states

img

ஆங்கிலத்தை ஒழுங்காக எழுதத் தெரியாதவர் ஜேஎன்யு பல்கலைக்கழக துணைவேந்தரா?

புதுதில்லி, பிப். 9- தில்லியின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு, முதன்முறையாக பெண் ஒரு வரை நியமித்திருக்கிறோம் என்று கூறி, டாக்டர் சாந்திஸ்ரீ துல்லிப்புடி பண்டிட் (59) என்பவரை மோடி அரசு நியமித்துள்ளது. சாந்திஸ்ரீ பண்டிட் தீவிர இந்துத்துவா பேர்வழி ஆவார். ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, ‘இத்தாலியின் ரிமோட் கண்ட்ரோல்’ என்றும், கிறிஸ்தவர்களை அரிசி மூட்டைக்காக மதம் மாறியவர்கள் என்றும் இழிவுபடுத்தியதுடன், “இந்தியா, இரண்டு நாடுகளாக பிரியக் கூடாது நல்ல நோக்கத்திற்காகவே காந்தியை கோட்சே கொலை செய்தார். இடதுசாரிகள் பயங்கர வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மன நலம் குன்றிய பயங்கரவாதிகள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் அழித்தொழிக் கப்பட வேண்டும்” என்றும் சமூகவலை தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டவர். பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பகிரங்க மாகவே தேர்தல் பிரச்சாரமும் செய்தவர். இந்நிலையில் அவரது இந்த நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்தான், சாந்திஸ்ரீ பண்டிட், ஆங்கிலத்தை ஒழுங்காக எழுதக் கூட தெரி யாதவர் என்று, பாஜக எம்.பி.யும், அண் மைக் காலமாக பாஜக அரசின் நடவடிக்கை களை துணிச்சலாக விமர்சித்து வருபவரு மான வருண் காந்தி விமர்சித்துள்ளார். தன்னை துணைவேந்தராக நியமித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து சாந்திஸ்ரீ பண்டிட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றை குறிப்பிட்டு, டுவிட்டரில் பதிவு ஒன்றை வருண் காந்தி வெளியிட்டுள்ளார்.  அதில், “ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக நிய மிக்கப்பட்டவர் வெளியிட்டுள்ள பிரஸ் ரிலீஸ் இது. இதைப் பார்த்தால் படிப்பறிவில்லாத ஒருவர் எழுதியது போலவே இருக்கிறது. முழுக்க முழுக்க இலக்கணப் பிழைகள் உள்ளன. ‘will strive’ என்று எழுவதற்குப் பதில் ‘would strive’ என்று எழுதியுள்ளார். ‘student-friendly’ என்று எழுதுவதற்கு ‘students friendly’ என்று எழுதியுள்ளார். ‘excellence’ என்று எழுதுவதற்குப் பதில் ‘excellences’ என்று எழுதியுள்ளார்.  இதுபோன்ற தரக்குறைவான, மலி வான நியமனங்கள் நமது இளைஞர் சமு தாயத்தை கடுமையாக பாதிக்கும். ஜவ ஹர்லால் நேரு பல்கலைக் கழகம் போன்ற சிறந்த நிறுவனத்துக்கு திறன்மிக்க வழி நடத்துதல் தேவை” என்று வருண் காந்தி குறிப்பிட்டுள்ளார்.