states

img

யஷ்வந்த் சின்ஹாவுக்கு கைகொடுத்த மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா!

புதுதில்லி, ஜூலை 22 - நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி  சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார்.  இதையடுத்து அவர் ஜூலை 25-ஆம் தேதி  முறைப்படி இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ளார். மேலும் அவ்வாறு பதவியேற்பதன் மூலம் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தமிழ்நாடு முதல் வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை வெளி யிட்டுள்ளனர்.

இந்நிலையில், திரௌபதி முர்முவுக்கும், அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கும் அதிகபட்சமாகவும் மற்றும் குறைந்த அளவிலும் வாக்குகள் கிடைத்த மாநிலங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. குடியரசுத் தலைவர் பதவிக்கான வாக்குப் பதிவு, நாடு முழுவதும் கடந்த ஜூலை 18 அன்று  நடைபெற்றது. இந்த தேர்தலில், 4 ஆயிரத்து 033 எம்எல்ஏ-க்கள், 776 எம்.பி.க்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 809 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 763 எம்.பி.க்கள், 3 ஆயிரத்து 991 எம்எம்ஏ-க்கள் என 99.18 சதவிகிதம் வாக்களித்தனர். இந்த வாக்குகள் ஜூலை 21 அன்று நாடாளுமன்றத்தின் 63-ஆம் எண் அறையில் தேர்தல் அதிகாரி பி.சி. மோடி முன்னிலையில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 6 லட்சத்து 76 ஆயிரத்து 803 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3 லட்சத்து 80 ஆயிரத்து 177 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி யடைந்தார். 

தேர்தலில் 763 எம்.பி.க்கள் தங்களின் வாக்கு களைப் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 540 எம்.பி.க்களின் வாக்குகளைத் திரெளபதி முர்மு பெற்றார். யஷ்வந்த் சின்ஹா வுக்கு 208 எம்.பி.க்கள் வாக்களித்தனர். 15 வாக்கு கள் செல்லாதவையாகின. எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு அடிப்படையில் (ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 700 என்ற அடிப்படையில்) திரெளபதி முர்மு 3 லட்சத்து 78 ஆயிரம் வாக்கு களையும், யஷ்வந்த் சின்ஹா 1 லட்சத்து 45 ஆயிரத்து 600 வாக்குகளையும் பெற்றனர். இதேபோல எம்எல்ஏ-க்களின் வாக்கு களை எடுத்துக் கொண்டால், திரெளபதி முர்மு 2 ஆயிரத்து 284 எம்எல்ஏ-க்களின் வாக்குகளை யும், யஷ்வந்த் சின்ஹா ஓராயிரத்து 699 எம்எல்ஏ-க்களின் வாக்குகளையும் பெற்ற னர். 38 எம்எல்ஏ-க்களின் வாக்குகள் செல்லாத வையாக அறிவிக்கப்பட்டன.

இதில், அதிகபட்சமாக உத்தரப் பிர தேசத்தில் 287 எம்எல்ஏ-க்கள் மூலம் 59 ஆயிரத்து  696 மதிப்புடைய வாக்குகள் திரௌபதி முர்முவுக்கு கிடைத்துள்ளது. யஷ்வந்த் சின்ஹா வுக்கு அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 215 எம்எல்ஏ-க்கள் மூலம் 32 ஆயிரத்து 616 மதிப்புடைய வாக்குகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 எம்எல்ஏ-க்களில் அதிமுகவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 75 எம்எல்ஏ-க்கள் திரெளபதி முர்மு-வுக்கு வாக்களித்துள்ளனர். திமுக கூட்டணியைச் சேர்ந்த 159 எம்எல்ஏ-க்களில் 158 பேரின் வாக்குகள் யஷ்வந்த் சின்ஹா வுக்கு கிடைத்துள்ளது. ஒரு வாக்கு செல்லாத தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மேற்குவங்கத்துக்கு அடுத்த படியாக யஷ்வந்த் சின்ஹாவுக்கு அதிகமாக வாக்குகளை கொடுத்த மாநிலங்களில் (ஒரு தமிழக எம்எல்ஏ-வின் வாக்கு மதிப்பு 176 என்ற  அடிப்படையில்) 27 ஆயிரத்து 808 என்ற வாக்கு மதிப்புடன் தமிழகம் 2-ஆவது இடத்தை வகித்துள்ளது. ஆந்திரா, நாகலாந்து, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் எம்எல்ஏ-க்களின் வாக்குகள் முழுமையாகவே திரெளபதி முர்மு-வுக்கு சென்றுள்ளது. இதனால் இந்த 3 மாநிலங்களில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.  இதேபோல திரெளபதி முர்முவுக்கும் சில மாநிலங்களில்  குறைந்த அளவில் மட்டுமே ஆதரவு கிடைத்துள்ளது. எம்எல்ஏ-க்கள் அடிப் படையில் பார்த்தால் கேரளாவில் ஒருவர், தெலுங்கானாவில் 3 பேர் என குறைந்த அளவிலான வாக்குகளே கிடைத்துள்ளன.