லக்னோ, பிப்.24- இந்துக்கள் எனக்கு வாக்களிக்கா விட்டால் அவர்களின் உடலில் இஸ்லா மியர்களின் ரத்தம் ஓடுவதாகவே அர்த் தம் என்று உ.பி.யை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராகவேந்திர பிரதாப் சிங் பேசியுள்ளார். உபி. மாநிலம் டொமரியாகஞ்ச் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்ப வர் ராகவேந்திர பிரதாப் சிங். உ.பி மாநில முதல்வரும், கோரக்கநாதர் மடத் தின் தலைவருமான ஆதித்யநாத் நிறு விய ‘ஹிந்து யுவ வாகினி’ (Hindu Yuva Vahini) அமைப்பின் செயலாள ராக இருக்கிறார். கடந்த 2017 தேர்தலில் டொமரியாகஞ்ச் தொகுதியில் சொற்ப வாக்குகளில் வெற்றிபெற்ற அவர், தற்போது மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவர், கூட்டம் ஒன்றில் வாக்காளர்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இந்த கிராமத்தில் வசிக்கும் இந்து வாக்காளர்கள் மற்றவர்களுக்கு வாக்க ளித்தால், அவர்களின் நாடி- நரம்பு களில் ‘மியா’க்களின் இரத்தம் (இஸ்லா மிய குடிகளை இழிவுபடுத்தும் சொல்) பரவியுள்ளது என்றே பொருள். அவர் ஒரு தேசத்துரோகி. முறையற்ற பாலி யல் உறவுகள் மூலம் பிறந்தவர். ஜெய் சந்த்-தின் முறையற்ற குழந்தை. அதுமட்டுமல்ல, தனது இத்தனை அவமதிப்புகளுக்குப் பிறகும், இந்து ஒருவர் மாற்று அணிக்குச் சென்றால், அவர் பொது வெளியில் தலை காட்ட முடியாது. ஒருமுறை எச்சரித்த பிற கும், நீங்கள் பிரச்சனையின் தீவிரத் தன்மையை உணரவில்லை என்றால், நீங்கள் ராகவேந்திர பிரதாப் சிங் யார் என்பதை விரைவில் உணர்ந்து கொள் வீர்கள்.” இவ்வாறு ராகவேந்திர பிர தாப் சிங் கூறியுள்ளார். இதுதொடர்பாக, சித்தார்த்நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய் துள்ளனர்.