புதுதில்லி, பிப். 25 - “உத்தரப் பிரதேசத்தில் ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி யில், மதங்களுக்கு இடையிலான வெறுப்புணா்வு அதிகரித்துள்ளது” என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரேயின் மகனும் சுற்று லாத் துறை அமைச்சருமான ஆதித்ய தாக்கரே விமர்சித்துள் ளார். உத்தரப் பிரதேச சட்டப்பேர வைத் தோ்தலில் சிவசேனா சார்பில் போட்டியிடும் 41 வேட்பாளா்களை ஆதரித்து, சித்தார்த் நகா் மாவட் டம், துமரியாகங் தொகுதியில் ஆதித்ய தாக்கரே பிரச்சாரம் செய்தார். அப்போது மேலும் அவர் கூறியிருப்பதாவது: பாஜக, மதத்தின் பெயரால் சமூகத்தில் வெறுப்புணா்வை பரப்பி வருகிறது; வேளாண் சட்டங் களை திரும்பப் பெறக் கோரி போரா டிய விவசாயிகளை மாவோயிஸ்டு கள், தீவிரவாதிகள் என அக்கட்சி இழிவுபடுத்தியது. அரசியல் என்பது மக்களின் நலன்களுக்காக இருக்க வேண்டும் என சிவசேனா நிறு வனா் பால் தாக்கரே எப்போதுமே கூறுவார். எனவே, அரசு மதத்தைப் பற்றியதாக இல்லாமல், மக்களின் நலனைப் பற்றியதாக இருக்க வேண்டும். உ.பி. பாஜக அரசு அவ்வாறு இல்லை. வாக்குறுதிகளை பாஜக ஒரு போதும் நிறைவேற்றியதில்லை. ஆனால், வெறுப்பையும் பயத்தை யும் மட்டுமே பாஜக பரப்புகிறது. உத்தரப் பிரதேசம் அபாயத்தில் இருப்பதாக மட்டுமே பாஜக பேசு கிறது. இது ஸ்ரீராமரின் பூமி. இங்கு எந்த அபாயமும் இல்லை. ஆதித்ய நாத் ஆட்சியால் மதங்களுக்கு இடையிலான வெறுப்புதான் அதிகரித்துள்ளது. இது மாற்றத்துக் கான நேரம். இன்றைய முதல்வா் தோ்தலுக்குப் பின்னா் முன்னாள் முதல்வராகி விடுவார் என்பது நிச்சயம். இவ்வாறு ஆதித்ய தாக்கரே பேசியுள்ளார்.