states

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் ஒற்றுமை யாத்திரைக்கு நல்ல வரவேற்பு : ராகுல் காந்தி

குருஷேத்ரா (ஹரியானா), ஜன.8-  பாஜக ஆளும் மாநிலங்களில்தான் ஒற்று மை யாத்திரைக்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது என்று ராகுல் காந்தி பெருமிதம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை ஹரியானா மாநிலத்தை அடைந் துள்ளது. அங்கு பல்வேறு மாவட்டங்கள் வழி யாக நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி ஞாயிறன்று குருஷேத்தி ரத்தை அடைந்தார்.  அப்போது செய்தியாளர்களை சந்தித்த  அவர் கூறுகையில், ‘‘பாரத் ஜோடோ யாத்தி ரைக்கு நாடு முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகத்தில் பரப்பப்படும் வெறுப்பு மற்றும் அச்சத்திற்கு எதிரானது என்பதை இந்த பாத யாத்திரை வலியுறுத்து கிறது. அத்துடன் வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிரானதும்கூட. நாட்டின் உண்மையான குரலை மக்கள் கேட்க வைப்பதே யாத்திரையின் நோக்கமாகும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன். தற்போது ஹரியானா வழியாக செல்கிறேன். இதுவரையிலான பயணத்தில் பல  விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. நாட்டின் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் பேசமுடிகிறது. யாத்தி ரைக்கு ஹரியானாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  ஒற்றுமை யாத்திரை இந்தி மாநிலங்கள் வழியாக செல்லும்போது வரவேற்பு கிடைக்காது என்று கூறப்பட்டது,

ஆனால்  மத்தியப் பிரதேசத்தில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட்டது. நாங்கள் ஹரியானாவை அடைந்தபோது மீண்டும் இது பாஜக ஆளும் மாநிலம் என்று கூறப்பட்டது, ஆனால் பெரும் வரவேற்பு எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் முன்னோக்கிச் செல்லச்செல்ல, மக்கள் ஆத ரவு மேலும் பெருகி வருகிறது. பாஜக  மாநிலங்களில்தான் ஒற்றுமை யாத்தி ரைக்கு மகத்தான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒற்றுமை யாத்திரையின் முக்கியமான நோக்கம் இதுதான், இந்தியாவின் குரல் நசுக்கப்பட்டுவருகிறது. மக்களிடையே அச்சம் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியா வை பிளவுபடுத்தும் வேலைகள் நடக் கின்றன. ஒரு சாதியை மற்றொருவருக்கு எதி ராக திருப்புகிறார்கள். ஒரு மதத்தை மற் றொரு மதத்திற்கு எதிராக திருப்புகிறார்கள். நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது, நாட்டின் செல்வம், ஊட கங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் சில ரால் கட்டுப்படுத்தப்படுகிறது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், பண வீக்கம் அதிகரித்து வருகிறது. இதற் கெல்லாம் எதிரானதுதான் இந்திய ஒற்றுமை யாத்திரை. இந்த யாத்திரை ஒரு ‘தபஸ்யா’ போன்றது ஆகும். அதாவது வெற்றிக்கான கடும் தவம் போன்றது’’ என அவர் கூறி னார்.