புதுதில்லி, செப்.27- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டத் திட்டங்களை வகுத்துள்ள பாதுகாப்புத்துறை ஊழியர்களுக்கு மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டுமேடை ஆதர வினைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுமேடை யின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது: நாட்டின் தலைநகரமான நாடா ளுமன்ற வீதியில் செப்டம்பர் 26 அன்று பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை ஊழியர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு முழுவதிலுமிருந்து வந்து கலந்து கொண்டு, பழைய ஓய்வூதியத் திட் டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் இதர பிரிவு ஊழி யர்களும் போராட்டப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் அவர்களிடமி ருந்து கணிசமான அளவிற்குத் தொகை முறையாக வசூலிக்கப் பட்டு வந்தபோதிலும், அவர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்கான உத்தர வாதம் எதுவும் இல்லை. புதிய ஓய்வூ தியத் திட்டத்தைத் தொழிற்சங்க இயக்கங்கள் எப்போதும் எதிர்த்தே வந்திருக்கின்றன. அவை பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் ஒன்றிய பாஜக அர சாங்கம் பல லட்சக்கணக்கான தொழி லாளர்களின் நியாயமான கோரிக் கையை பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருக்கிறது. உள்நாட்டு மற் றும் வெளிநாட்டு பெரும் கார்ப்ப ரேட்டுகளின் வராக்கடன்கள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் களைத் தள்ளுபடி செய்யும் ஒன்றிய பாஜக அரசு, அதே சமயத்தில் தொழி லாளர்களுக்குப் பழைய ஓய்வூ தியத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்று கோரும்போது, நிதி நெருக்கடியால், முடியாது என்று கூறிக்கொண்டிருக்கிறது.
எனினும் பாதுகாப்புத்துறை ஊழியர்களின் போராட்டங்களை நசுக்க மோடி அரசாங்கம் நட வடிக்கை எடுத்துள்ள போதிலும் அவற்றைத் துச்சமெனத் தூக்கி எறிந்து போராட்டப்பாதையில் ஈடு பட்டுள்ள பாதுகாப்புத்துறை ஊழி யர்களுக்கு மத்தியத் தொழிற்சங்கங் கள் பாராட்டுதல்களையும், வாழ்த் துக்களையும் தெரிவித்துக் கொள்கி றது. அவர்களின் இக்கோரிக்கைக்கு மத்தியத் தொழிற்சங்கங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கி றது. தொழிலாளர்களுக்கும், ஊழி யர்களுக்கும் ஓய்வூதியத்தில் கட் டுப்பாட்டைக் கொண்டுவர வேண் டும் என்று வலியுறுத்தும் நவீன தாரா ளமயக் கொள்கைகளுக்கு எதி ராக அனைத்துத் தொழிலாளர் களும், ஊழியர்களும் அணிதிரள வேண்டும் என்று மத்தியத் தொழிற் சங்கங்கள் அறைகூவி அழைக்கி றது. இதன் ஒரு பகுதியாகவே தொழி லாளர்களின் தொழிற்சங்க உரிமை கள் மீதும் தாக்குதல்கள் தொடுக் கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசாங்கம் உடனடி யாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என் றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என் றும் மத்தியத் தொழிற்சங்கங்கள் கோருகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிஐடியு சார் பில் பொதுச் செயலாளர் தபன்சென், ஏஐடியுசி சார்பில் அமர்ஜித் கவுர், தொமுச சார்பில் சண்முகம் முத லானவர்கள் கையொப்பமிட்டுள்ள னர். (ந.நி.)