states

இந்திய வம்சாவளியினர் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்காவிலும் மனித உரிமை மீறல்கள்

புதுதில்லி,ஏப்.15-   அமெரிக்காவிலும் மனித உரிமை மீறல்கள் உள்ளன.அங்கு இந்திய வம்வாவளி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்று இந்திய  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறி யுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெ ரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை ஏப்ரல் 11 அன்று வாஷிங்டனில் சந்தித்து பேசினார். பின்னர்  இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் கவலை யளிப்பதாக அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். இந்நிலையில் இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தில்லியில் கூறுகையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பின் போது மனித உரிமை மீறல் விவ காரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை. அரசியல், ராணுவ ரீதியாக மட்டுமே ஆலோசனை நடத்தப்பட்டது. நம்மை (இந்தியாவை) குறித்து வெவ்வேறு கருத்துகள் இருப்பது இயல்பானது. அதே நேரம் நமக்கும் கருத்துகளை கூற உரிமை உள்ளது. அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகள் குறித்து நாமும் கருத்துகளை தெரிவிக்க முடியும். அமெ ரிக்காவிலும் மனித உரிமை மீறல் பிரச்சனைகள் உள்ளன. அமெரிக்காவில் இந்திய வம்சா வளி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உதாரணமாக கூற முடியும் என்று தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.