தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட 32000 கேள்விகளுக்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட 32,000 கேள்விகள் ஒன்றிய தகவல் ஆணையத்தின் முன் நிலுவையில் இருப்பதாக மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில், 2019-20ல் 35 ஆயிரம் கேள்விகளும், 2020-21ஆம் ஆண்டில் 38 ஆயிரம் கேள்விகளும் பதிலளிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2021-22ஆம் ஆண்டில் டிசம்பர் 6ஆம் தேதி நிலவரப்படி, 32,147 கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாமல், ஒன்றிய தகவல் ஆணையம் நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.