புதுதில்லி, பிப்.16- ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க தேவையான ஏற்பாடு களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புத்தல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில், ஜி-20 அமைப்பின் தலைவர் பதவியை வகிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக ஜி-20 செயலகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜி-20 தலைமை பொறுப்பு தொடர்பான தொழில்நுட்பம், ஊடகம், பாதுகாப்பு, இதர வசதிகள் தொடர்பான பணிகளை கையாள்வதற்காக இந்த செயலகம் அமைக்கப்படுகிறது. ஒன்றிய வெளியுறவு அமைச்ச கம், ஒன்றிய நிதி அமைச்சகம், இதர அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரி களும், ஊழியர்களும் இந்த செய லகத்தில் பணியாற்றுவார்கள். 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை செய லகம் இயங்கும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. சர்வதேச பொருளாதாரம் தொ டர்பான முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண 20 நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வருகின்றன. வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி வரை இந்தியா தலைமை பொறுப்பு வகிக்கவுள்ளது.