states

img

வேலையின்மை, நீர்ப்பாசன பிரச்சனை எல்லாம் நாட்டில் இல்லையா என்ன?

மோடிக்கு மெகபூபா முப்தி கேள்வி

ஸ்ரீநகர், மார்ச் 24- ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப் படத்தை இழிவுபடுத்த சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி வருவது குறித்து, காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜன நாயக கட்சித் தலைவருமான மெக பூபா முப்தி பதிலளித்துள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜம்மு - காஷ்மீரில், அனைவரும் கொடுமைகளை எதிர்கொண்டனர். பாஜகவும், பிரதமர் மோடியும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை எந்த ளவு தீவிரமாக விளம்பரப்படுத்து கிறார்களோ, அதே தீவிரத்துடன், கடந்த 8 ஆண்டுகளில் காஷ்மீரி பண்டிட்டு களுக்கு ஏதாவது செய்திருந்தால் இன்று அவர்களின் நிலை வேறுவித மாக இருந்திருக்கும். எனது தந்தையின் நெருங்கிய உற வினர்கள் கொல்லப்பட்டனர். நாங்கள் வன்முறையை நிறுத்த விரும்பு கிறோம். அவர்கள் (பாஜக) பாகிஸ் தானுடனான சண்டையில் வெல்ல விரும்புகிறார்கள். இந்து - முஸ்லிம்,  ஜின்னா, பாபர், அவுரங்கசீப் என்று பேசுகிறார்கள். ஔரங்கசீப் 500 ஆண்டு களுக்கு முன் இருந்தார். பாபர் 800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தார். இப்போது பாபர்-அவுரங்கசீப் பற்றி பேசுவதன் பொருத்தம் என்ன? சாலை வசதி, நீர்ப்பாசனம், வேலையின்மை போன்ற பிரச்சனைகள் எதுவும் நாட் டில் இல்லையா என்ன? இந்திய அரசு ‘காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை ஆக்ரோஷமாக ஊக்கு விக்கும் விதமும் காஷ்மீரி பண்டிட்க ளின் வலியை ஆயுதமாக்குவதும் அவர்களின் தவறான நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு மெகபூபா முப்தி கூறி யுள்ளார்.