states

ராகுல் நடைபயணத்தில் இணையும் உமர் அப்துல்லா, மெகபூபா

புதுதில்லி, டிச. 28 - காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர்  அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர், ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று,  அவரது இந்திய ஒற்றுமை நடைபய ணத்தில் கலந்து கொள்கின்றனர். தற்போது ஒருவார ஓய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராகுல் நடைபயணம், ஜனவரி 2 முதல் தில்லியிலிருந்து மீண்டும் துவங்கவுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களில் 448 கி.மீ. தூரத்திற்கு ராகுல் காந்தி நடைபயணத் தைத் தொடர்கிறார். ஜனவரி 26 குடியரசு தினம் வரை இப்பயணம் நடைபெறுகிறது. காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக்  அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மெகபூபா முப்தி இது தொடர்பாக டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காஷ்மீரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்குமாறு எனக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரது அசாத்திய தைரியத்திற்கு வணக்கம். பாசிச சக்திகளுக்கு சவால் விடும் துணிச்சல் உள்ள ஒருவருடன் நிற்பது எனது கடமை என்று நான் நம்புகிறேன். சிறந்த இந்தியாவை நோக்கிய அவரது நடைபயணத்தில் அவருடன் இணைந்து கொள்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ராகுலுக்கு பாதுகாப்பு  வழங்குமாறு கடிதம் இந்நிலையில் காஷ்மீரில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமை நடை பயணத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார். “காங்கிரஸ் ஒற்றுமை நடைபயணத்தில் பல இடங்களில் பாதுகாப்பு குறைபாடு கள் ஏற்பட்டன. தில்லியில் நடைபெற்ற பய ணத்தில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த தில்லி  காவல்துறை தவறிவிட்டது. ராகுலுக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு உள்ள நிலையில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஹரியானாவில் இருந்து தவறான நபர் கள் சிலர் நடைபயணத்தில் நுழைந்ததாக ஹரியானா உளவுத்துறை தகவல்  தெரி வித்துள்ளது. இதுகுறித்து சோஹ்னா  காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப் பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய இரு  தலைவர் களும் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள் ளனர். 2013 நக்சல் தாக்குத லில் சத்தீஸ் கர் காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப் பட்டுள்ளனர். எனவே, வரவிருக்கும் நாட் களில் பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் என தீவிர வாதிகள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதால் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கே.சி. வேணுகோபால் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.