states

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

புதுதில்லி, பிப். 20 - சிவசேனா கட்சியின் பெயர், தேர்தல்  சின்னம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத் தில் இருக்கும்போது, திடீரென அக் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இது முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி யினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், அவர்கள் தற்போது உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள னர். ‘மகாராஷ்டிரா மராத்தியர் களுக்கே’ என்ற மண்ணின் மைந்தர் முழக் கத்தையும், தீவிர இந்துத்துவா நிலை பாட்டையையும் முன்னிறுத்தி பால்  தாக்கரே-வால் 1960-களில் உருவாக்கப் பட்ட கட்சி சிவசேனா. பால்தாக்கரே மறைவுக்குப் பின்னர் அவரது மகன் உத்தவ் தாக்கரே சிவசேனாவை நடத்தி வந்தார். பால் தாக்கரே, உத்தவ் தாக்கரே ஆகிய இருவரது தலைமை யுமே பாஜக-வுடன் கூட்டணி வைத்து, 25  ஆண்டுகளுக்கும் மேலாக மகாராஷ்டிர ஆட்சியதிகாரத்தில் பங்கேற்று வந்தது. இதனிடையே, 2019 சட்டப்பேர வைத் தேர்தலுக்குப் பின், முதல்வர் பதவி யாருக்கு? என்ற சண்டையில், பாஜக - சிவசேனா உறவு முறிந்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் சேர்ந்து புதிய கூட்டணியை ஏற்படுத்திய சிவசேனா, மகாராஷ்டிர ஆட்சியதிகாரத்திலும் அமர்ந்தது. உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வ ரானார். அவரின் ஆட்சி ஒன்றரை ஆண்டுகளை தாண்டி நடைபெற்று வந்தது.  இந்நிலையில், உத்தவ் தாக்கரே-வுக்கு எதிராக சிவசேனா எம்எல்ஏ-க் களைத் தூண்டிவிட்ட பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனாவை இரண்டாக உடைத்தது. 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களையும் உத்த விற்கு எதிராக திருப்பியது. இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ, அதி ருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே-வுடன் சேர்ந்து பாஜக மீண்டும் அதிகாரத்திற்கு வந்தது.

ஷிண்டே  முதல்வராக, பாஜக தலைவர் தேவேந் திர பட்னாவிஸ் துணைமுதல்வரானார். ஷிண்டே மூலம் உத்தவ் தாக்கரே வின் பதவியைப் பறித்த பாஜக, அவரி டமுள்ள சிவசேனா கட்சி மற்றும் தேர்தல்  சின்னத்தையும் பறிக்கவும் அடுத்த திட்டம் போட்டது. இதற்கு எதிராக உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால், தேர்தல் ஆணைய மானது, சில நாட்களுக்கு முன், திடீ ரென ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவ சேனாவின் கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சி, தேர்தல் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தேர்தல் ஆணையம் ஒருசார்பாக முடிவெடுத்து அறிவித்திருப்பதை ஏற்க முடியாது என்று கண்டனம் தெரி வித்தது. அதைத்தொடர்ந்து தற்போது தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. முன்னதாக, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய உத்தவ் தாக்கரே, “பிரதமர் மோடியின் அடிமையான தேர்தல் ஆணையம் இதற்கு முன்  செய்யாததை செய்துள்ளது. ஆதர வாளர்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும். மும்பை உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டும். கட்சியின் சின்னம் திருடப்பட்டுள்ளது. திருடர்களுக்கு பாடம் புகட்டப்பட வேண்டும்” எனறும் ஆவேசமாக பேசினார்.