states

சமாஜ்வாதி எம்எல்ஏ-வின் பெட்ரோல் பங்க் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டம்!

புதுதில்லி, ஏப். 8 - உத்தரப் பிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்தி ற்கு எச்சரிக்கை விடுத்துப் பேசி யிருந்த, சமாஜ்வாதி கட்சி எம் எல்ஏ-வின் பெட்ரோல் பங்க் இடித் துத் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடந்துமுடிந்த தேர்தலில் பரேலி மாவட்டத்தில் உள்ள போஜ்புரா தொகுதி யில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஷாஜி இஸ்லாம் அன்சாரி ஆவார்.  சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ- வான இவருக்கு போஜ்புராவின் பர்சக் கேடா பகுதியில் தில்லி - ராம்பூர் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று சொந்தமாக உள்ளது.  இதனிடையே, எம்எல்ஏ ஷாஜி இஸ்லாம் அன்சாரி, முதல்வர் ஆதித்யநாத்தை மிரட்டுவது போலவும், ஆத்திரமூட்டும் அறிக்கை களை வெளியிடுவது போலவும் வீடியோ கிளிப் ஒன்று ஆன் லைனில் வெளியானது. அதில், “ஆதித்யநாத் வாயிலிருந்து குரல் வந்தால், எங்களின் (சமாஜ்வாதி கட்சி) துப்பாக்கி கள் புகையை வெளியிடாது, தோட்டாக்களையே வெளி யிடும்” என்று ஷாஜி இஸ்லாம் கூறியிருந்தார். 

இது சர்ச்சையை ஏற்படுத் திய நிலையில், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கல வரத்தை தூண்டும் நோக்கில் மிரட்டுதல் மற்றும் ஆத்திர மூட்டும் அறிக்கைகளை வெளி யிடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் ஷாஜி இஸ்லாம் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே, தில்லி - ராம்பூர் நெடுஞ்சாலையில் இருந்த ஷாஜி இஸ்லாமின் பெட்ரோல் பங்க்கும், மாவட்ட நிர்வாகத்தால் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. பரேலி வளர்ச்சி ஆணை யத்திடம் (பிடிஏ) கட்டட வரை பட அனுமதி பெறாமல் பெட்ரோல் பங்க் கட்டப் பட்டிருந்தது, இதுகுறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது என்று கூறியுள்ள மாவட்ட நிர்வாகம், அந்த நோட்டீஸிற்கு ஷாஜி இஸ் லாம் இதுவரை விளக்கம் அளிக்காததால், புல்டோசரு டன் சென்ற பிடிஏ அதிகாரிகள், பெட்ரோல் பங்க் கட்டடத்தை இடித்து அகற்றியதாக தெரி வித்துள்ளது. ஆனால்,

தனது பெட் ரோல் பங்க் தரைமட்டம் ஆக்கப் பட்டதை பழிவாங்கும் நட வடிக்கை என்று குற்றம்சாட்டி யுள்ள அன்சாரி “ஆதித்ய நாத்திற்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் வீடியோவைப் பொறுத்தவரை, பாஜக-வினர் அதனை எடிட் செய்து பரப்பி யுள்ளனர். உ.பி. சட்டப்பேர வையில் பலமான எதிர்க்கட்சி யாக வந்திருப்பதால், வெறும் புகையை அல்ல தோட்டாக் களை வெளியிடும் துப்பாக்கி யாக சமாஜ்வாதி இருக்கும்... அனைத்து விஷயங்களுக்கும் வலுவான பதிலடி கொடுப் போம் என்றுதான் அந்த நிகழ்ச்சி யில் நான் கூறியிருந்தேன்” என்றும் விளக்கம் அளித்துள் ளார். ஆதித்யநாத் மற்றும் பாஜகவுக்கு எதிராக பேசுவோ ரின் உடமைகள், புல்டோசரை வைத்து இடித்துத் தரைமட்டம் ஆக்கப்படுவது உ.பி.யில் தொடர் நிகழ்வாகி விட்டது. இத னால் எதிர்க்கட்சிகள், ஆதித்ய நாத்தை ‘புல்டோசர் பாபா’ என்றே அழைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.