திருவனந்தபுரம், ஜன.7- கீத்தும் நீதுவும் தங்கள் தந்தையின் உறுப்புகளை திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியிடம் ஒப்படைத்த னர். அதில் அன்பு நிறைந்த இதயம், தொடும் கைகள், பிளவுபட்ட ஈரல் மற்றும் கண்களை பிரித்து, ஏழு பேரு க்கு புதிய உயிர் கொடுத்தனர் மருத்து வர்கள். கொல்லம், கிளிகொல்லூரைச் சேர்ந்த எஸ்.வினோத்தின் (54) எட்டு உடல் உறுப்புகள் 7 பேரிடம் ஒப்படைக் கப்பட்டன. திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த முதல் பல்லுறுப்பு மீட்பும் தானமுமா கும் இது. கடந்த ஒருவாரம் முன்பு டிசம்பர் 30 மதியம் 12 மணியளவில் தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வினோத் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார்.
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாயன்று (ஜன.4) இரவு மூளைச் சாவு உறுதி செய்யப்பட்டது. மனைவி சுஜாதா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மகள் கீத்து. மற்றொரு மகள் நீத்து ஆகியோர் விருப்பத்தின் பேரில் வினோத்தின் உடல் உறுப்புகள் பிரித்து எடுக்கப்பட்டன. சென்னை எம்ஜிஎம் மருத்துவ மனையில் இதயம், எர்ணாகுளம் அமிர்தாவில் கைகள், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் திருவனந்தபுரம் கிம்பஸ் மருத்துவமனையில், மற்றொரு சிறு நீரகம் அரசு மருத்துவக் கல்லூரி சிறுநீரக மருத்துவமனையில். கண்கள் அரசு கண் மருத்துவமனையில் காத்தி ருப்பில் உள்ள நோயாளிகள் பெற உள்ளனர். கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் முன்னிலையில் மருத்துவக் கல்லூரி மாற்று அறுவை சிகிச்சை மேலாளர் டாக்டர். அனில் சத்தியதாஸ் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.