கொல்கத்தா, ஏப்.16- மேற்கு வங்கத்தில், 14 வயதுச் சிறுமி, அண்மையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட நிலை யில், அந்த சிறுமியின் இறுதிச் சடங்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் முன்னின்று நடத்தியுள்ளனர். மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் ஹன்ஸ்காலி கிராமத்தைச் சேர்ந்தவர் சமரிந்திர கயாலி. திரிணா முல் காங்கிரஸ் நிர்வாகியான இவர் கஜ்னா பஞ்சாயத்து தலைவராகவும் இருக்கிறார். இவரின் மகன் பிரஜா கோபால்.
21 வயதாகும் பிரஜா கோபால், கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி இரவு தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். அப் போது, அதேகிராமத்தைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை பிரஜாகோபாலும், அவ ரது நண்பர்களும் கும்பலாக சேர்ந்து மிகக் கொடூரமான முறையில் பாலி யல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். இதில் அந்தச் சிறுமி, குற்றுயிரும் குறையுயிருமாக ஆன நிலையில், அவரைக் காரில் கொண்டுபோய் அவரது வீட்டு முன்பு போட்டுவிட்டுச் சென்றனர். அதிக ரத்தப்போக்கு கார ணமாக மறுநாள் அதிகாலையி லேயே அந்தச் சிறுமி பரிதாபமாக இறந்து போனார். பெற்றோர் துடி துடித்துப் போயினர்.
ஆயினும் நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், வீட்டோடு கொளுத்தி விடுவோம் என்று மிரட்டிய திரிணாமுல் கட்சித் தலைவர் சமரிந்திர கயாலியும், அவ ரைச் சேர்ந்தவர்களும் சிறுமியின் உடலை துப்பாக்கி முனையில் கைப் பற்றி, எந்தவித இறப்புச் சான்றித ழும், பிரேதப் பரிசோதனையும் இல் லாமல், அங்கீகரிக்கப்படாத சுடு காட்டில் உடலை எரித்தனர். இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தபோதும் கூட, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் அர சும், மேற்கு வங்க காவல்துறையும் குற்றமே நடக்கவில்லை என்று சாதித் தன. தனது கட்சிக்காரரை காப்பாற் றும் விதமாக, முதல்வர் மம்தா பானர்ஜியே நேரடியாக தலையிட்டு, “பாதிக்கப்பட்ட சிறுமி, உண்மையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட் டாரா அல்லது காதல் விவகாரத்தில் இருந்ததால் கர்ப்பமானாரா?” என்று சிறுமியின் மரணத்தை மோசமான வகையில் கொச்சைப்படுத்தினார். தற்போது கொல்கத்தா உயர்நீதி மன்றம் தலையிட்டதன் பேரில், சிறுமி பாலியல் வன்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான், சிறுமிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இறுதிச் சடங்கில் புரோகிதர்கள் கலந்து கொள்வதற்குக் கூட திரிணாமுல் காங்கிரஸ் தடை விதித்த சம்பவமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டு, சிறுமியின் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்தியதும் தெரியவந்துள்ளது. தங்களின் மகள் ஏப்ரல் 5 அதி காலை இறந்த நிலையில், அவருக்கு ஏப்ரல் 7-ஆம் தேதி மூன்றாம் நாள் காரியங்களை செய்வதற்கு சிறுமி யின் பெற்றோர் விரும்பியுள்ளனர். இதற்காக, கிராமத்திலுள்ள புரோ கிதர்களை அணுகி அழைத்துள்ள னர். ஆனால், திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியினரின் மிரட்டல் காரண மாக யாரும் இறுதிச் சடங்கை நடத்தி வைக்க முன்வரவில்லை. இந்நிலையில், சித்தாந்த அடிப் படையில், மதம், சடங்கு, ஆச்சாரங்க ளில் நம்பிக்கையில்லாத நிலை யிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று, சிறுமியின் இறுதிச் சடங்கு நடக்க உதவி செய்துள்ளது. அசோக் பானர்ஜி என்ற புரோகிதரை அழைத்து வந்து, சிறுமியின் இறுதிச் சடங்கிற்கு உதவியுள்ளது. அசோக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபி என்ற நிலையில், அவர் இறுதிச் சடங்கை நடத்தி வைத் துள்ளார். இது அந்தக் குடும்பத்திற்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.
இதுதொடர்பாக சிறுமியின் தந்தை ‘தி டெலிகிராப்’ பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “இறுதிச் சடங்குகளைச் செய்வதில்கூட இவ் வளவு சிக்கலை எதிர்கொள்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் சடங்குகளை நடத்த ஒப்புக்கொண்ட வயதான புரோகி தர்கள் கூட, செல்வாக்கு படைத்த வர்களின் அரசியல் அழுத்தம் காரண மாக, வியாழக்கிழமை காலை ‘திடீ ரென்று பின்வாங்கினர்’. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமான சாக்குப் போக்குகளை கூறினர். எனது மகளை சித்ரவதை செய்தவர்கள் அவர்களையும் அச்சுறுத்தியதாக கருதுகிறேன். தற்போது புரோகிதரை ஏற்பாடு செய்தவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதில், புரோகிதருக்கான ஏற்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செய்தது என்றால், புரோ கிதருக்கான கட்டணத்தை, பாதி கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் சார்பில், மதச்சார்பற்ற முன்னணி எம்எல்ஏ நவுசாத் சித்திக் செலுத்தி யுள்ளார். அதாவது, ஒரு இந்துச் சிறுமியின் இறுதிச் சடங்கிற்கு ஒரு முஸ்லிம் எம்எல்ஏ உதவி செய் துள்ளார். இது அந்தப் பகுதியில் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.