புதுதில்லி, ஏப்.13- ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப் பட்ட வர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத் தில், ‘‘1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று ஜாலியன் வாலாபாக்கில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார். ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஏராளமான மக்கள் வீரமரணம் அடைந் தனர். காலனித்துவ நிர் வாகத்திற்கு அடக்குமுறை அதிகாரங்களை வழங்கிய ரவுலட் சட்டங்களுக்கு எதி ராக அமைதியான முறை யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மக்கள் பிரிட்டிஷ் படை களால் சுட்டுக் கொல்லப்பட்ட னர். அவர்களை நினைவு கூரும் வகையிலும், அவர் களுக்கு மரியாதை செய்யும் வகையிலும் பிரதமர் மோடி புதனன்று மரியாதை செலுத்தினார்.