states

ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒட்டுக்கேட்பு தகவல்கள் அழிக்கப்படுமாம் : ஒன்றிய அரசு கூறுகிறது

புதுதில்லி,ஏப்.7- சட்டத்திற்கு உட்பட்டு உளவு மற்றும் விசாரணை கள் முகமைகள் இடைமறித்து ஒட்டுக்கேட்ட தொலை பேசி உரையாடல்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அழிக்கப்பட்டுவிடும் என்று ஒன்றிய  அரசு தெரிவித்துள்ளது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் வெளியாகி ஆளும் ஒன்றிய அரசையும் நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சொந்த மக்களையே வேவுபார்த்த மோசமான அரசு என்று கடும் விமர்ச னங்கள் எழுந்தன. இந்நிலையில் சட்டப்பூர்வமாக ஒட்டுக்கேட்கப்படும் தொலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல்களை விசாரணை முகமைகள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அழித்து விடும் என்ற தகவலை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2016 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரை யிலான காலத்தில் 10 விசாரணை முகமைகள் ஒட்டுக்கேட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும் என தகவல் உரிமை சட்டத்தின் கீழ் நபர் ஒருவர் கேட்டிருந்தார்.  இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்தி டம் எழுத்துப்பூர்வமாக அளித்த விளக்கத்தில், ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒட்டுக்கேட்பு தகவல்கள் அழிக்கப்பட்டு விடும் என்றும், இதனால், விண்ணப்பதாரரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. குற்றச் சம்பவங்கள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு காரணங் களுக்காக ஒன்றிய அரசின் பல விசாரணை முகமைகள் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.