பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் இடம்பெறும் என்ற நம்பிக்கையிலிருந்த வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், உற்பத்தியாளர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்னை, டிச.24- தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் மற் றும் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஏலக்காய், முந்திரி, நெய் உள்ளிட்ட பொருட்களையும் சேர்த்து வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி யுள்ளார். டிசம்பர் 24 சனிக்கிழமையன்று முதல மைச்சருக்கு அவர் அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், பச்சரிசி, சர்க்கரை அடங்கிய தொகுப்பினை தமிழக அரசு அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங் கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்பட்டு வந்தது. இதனால் பொங்கல் பண்டிகைக்காகவே விளைவிக்கப்படும் செங்கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைத்து வந்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த ஆண்டும் தமி ழக அரசு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் மாநிலம் முழுவதும் கரும்பு விவசாயிகள் கூடுதலான பரப்பள வில் கரும்பை விளைவித்துள்ளனர். ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் கரும்பு விவசாயிகள் பெருத்த ஏமாற்றம டைந்துள்ளதுடன், விளைவித்த கரும்பின் விலை வீழ்ச்சியடைந்து மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என ஆழ்ந்த கவலையில் மூழ்கி யுள்ளனர். அதுபோல், பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் இடம்பெறும் என்ற நம்பிக்கையிலிருந்த வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், உற்பத்தியாளர்களும் ஏமாற்றம் அடைந் துள்ளனர்.
அதுபோல், கடந்த ஆண்டுகளில் தமி ழக அரசின் பொங்கல் தொகுப்பில் வழங் கப்பட்டு வந்துள்ள ஏலக்காய், முந்திரி, நெய், வெல்லம், கரும்பு போன்றவைகளும் வழங்கப்பட வேண்டுமென பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பும் உள்ளது. எனவே, தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் மற்றும் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட முந்திரி, ஏலக்காய், நெய் போன்ற பொருட்களையும் சேர்த்து தர மான முறையில் வழங்கிடவும், கரும்பை விவசாயிகளிடமும், வெல்லத்தை உற்பத்தி யாளர்களிடமும் நேரிடையாக கொள்முதல் செய்திடவும் தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் கரும்பு விவசாயிகளும், வெல்லம் உற்பத்தியா ளர்களும் பெரிதும் மகிழ்ச்சியடைவதுடன் பொதுமக்களும் பயனடைவார்கள் என் பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.