states

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் மோடி அரசு!

புதுதில்லி, ஜன. 6 - வெளிநாட்டு பல்கலைக்கழகங் களை, இந்தியாவிற்குள் அனு மதிக்கும் முடிவை மோடி அரசு எடுத்துள்ளது. இதுதொடா்பான வரைவு விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் தங்களின் கல்வி நிலையங்களைத் துவங்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அவர்கள் இஷ்டப்படியே மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனங்களை நடத்திக் கொள்ளலாம். கட்டண விகி தங்களையும் அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். அரசு தலையிடாது என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழுத் (UGC) தலைவர் எம்.ஜெகதீஷ் குமாா் அறிக்கை ஒன்றை யும் வெளியிட்டுள்ளார்.  அதில், “வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள், இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்க பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதல்  வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியா வில் வளாகங்கள் தொடங்க அனுமதி  பெற இரண்டு தகுதிகள் வகுக்கப் பட்டுள்ளன” என்று கூறியிருக்கும் ஜெக தீஷ் குமார், அதில் ஒன்றாக, உலக ளாவிய தரவரிசையில் முதல் 500 இடங் களுக்குள் தரவரிசையைப் பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களாக இருக்க வேண்டும் என்று கூறியுள் ளார். ஆனால், “எந்த உலகளாவிய தர வரிசை” யுஜிசி-யால் அங்கீகரிக்கப் படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. மற்றொன்று “அந்த பல்கலைக்கழகம் செயல்படும் நாட்டில் சிறப்புமிக்க கல்வி நிறுவனமாக திகழ வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு தகுதிகளில் ஒன்றை பூர்த்தி செய்யும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு தகுதிபெறும் பல்கலைக் கழகங்கள், “கட்டண அமைப்பு, உத வித்தொகை, சேர்க்கை செயல்முறை  ஆகியவற்றை தங்கள் பல்கலைக்கழக விதிமுறைப்படியே முடிவு செய்து கொள்ளலாம். ஆசிரியர் மற்றும் ஊழி யர்களை நியமிப்பதற்கான தகுதிகள், சம்பள அமைப்பு மற்றும் பிற சேவை நிபந்தனைகளையும் தாங்களே தீர்மா னித்துக் கொள்ளலாம். தங்களின் பல்கலைக்கழகங்களில் யாரை அனு மதிக்க வேண்டும், எவ்வளவு பேரை  அனுமதிக்க வேண்டும். மாணவர் களுக்கு என்ன மாதிரியான உதவித் தொகையை வழங்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்களே முடிவு  செய்து கொள்ளலாம்” என்று சுதந்திரம் வழங்கியுள்ள மோடி அரசு, “இருப்பி னும், அந்த வெளிநாட்டு உயர் கல்வி  நிறுவனங்களால் (FHEI) நியமிக்கப் படும் ஆசிரியர்களின் தகுதிகள் அவர்கள் சொந்த நாட்டின் முக்கிய வளாகத்தில் வழங்கப்படுவதற்கு இணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டண விகிதங்களைப் பொறுத்தவரை நியாயமானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும்” என்று மட்டும் ஏதோ நிபந்தனை விதிப்பது போல காட்டிக் கொண்டுள்ளது. இதேபோல மற்றொரு நிபந்தனை யும் மோடி அரசு விதித்துள்ளது. “இந்தி யாவிற்குள் நுழையும் நிறுவனங்கள் ‘இந்தியாவின் தேசிய நலனையோ அல்லது இந்தியாவின் உயர்கல்வியின் தரத்தையோ பாதிக்கக்கூடிய எந்த வொரு பாடத் திட்டத்தையும் வழங்கக் கூடாது’ என்பதுதான் அந்த நிபந்தனை யாகும். 

“வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங் களின் செயல்பாடு இந்தியாவின் இறை யாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநி லத்தின் பாதுகாப்பு, வெளி மாநிலங் களுடனான நட்புறவு, பொது ஒழுங்கு,  கண்ணியம் அல்லது ஒழுக்கம் ஆகி யவற்றுக்கு முரணாக இருக்கக் கூடாது” என்று வரைவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்தியா வின் தேசிய நலனையோ, பாது காப்புக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகை யிலான பாடத்திட்டம் எது என்பதையோ சுட்டிக்காட்டவில்லை. மேலும், “இந்தியாவில் நிறுவப்பட உள்ள வளாகங்களில் பாடத் திட்டங்கள் முழு நேர நேரடி வகுப்புகளாக மட்டுமே  நடத்தப்பட வேண்டும். ஆன்லைன் மூல மாகவோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமாகவோ நடத்த அனுமதி இல்லை. இந்திய வளாகத்தில் தங்கள் முதன்மை கல்வி நிறுவன பேராசிரியர் களைக் கொண்டு பாடங்கள் நடத்தப் படுவதை உறுதி செய்யவேண்டும். இந்திய வளாகத்தில் வழங்கப்படும் கல்வித் தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது. தேர்வு செய்யப் படும் வெளிநாட்டு பல்கலைக்கழகங் களுக்கு முதலில் 10 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படும். பின்னர் 9-ஆவது ஆண்டில் சில நிபந்தனை களை ஆய்வு செய்த பின் மீண்டும் அனுமதி புதுப்பிக்கப்படும்” என்று யுஜிசி கூறியுள்ளது. இந்த வரைவு அறிக்கை மீது,  அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, கருத்துகள் பெறப்பட்டு அதன டிப்படையில் இறுதி விதிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.