states

img

“இப்போதைக்கு மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வாய்ப்பில்லை”: மின்வாரிய அதிகாரி

தற்போது வரை மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.  

மின்வாரியம் கடனில் இருந்து மீண்டு வருவதற்கு மின் கட்டணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் மாற்றி அமைக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன்படி 20 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் இது தொடர்பான முன்மொழிவுகள் ஏதும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.  

இது குறித்து மின் வாரிய உயர் அதிகாரியிடம் கேட்டபோது, தற்போது வரை மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.  கடந்த ஆட்சியிலும் மின் கட்டணத்தை உயர்த்த பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அரசின் கொள்கை முடிவின் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதே போல் இப்போதும் ஒன்றிய அரசு மின் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டாலும் அது பற்றி தமிழக அரசு தான் முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு மின்  கட்டணத்தை மாற்றி அமைக்க வாய்ப்பில்லை என்று இவ்வாறு அவர் தெரிவித்தார்.